tamilnadu

img

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த மழையால் மக்கள் மகிழ்ச்சி

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில்  பலத்த மழையால் மக்கள் மகிழ்ச்சி

சென்னையில் புதன்கிழமை காலை 11.30 மணிக்கு இடி மின்னலு டன் பலத்த மழை பெய்தது. திருவள்ளூர், சென்னை, காஞ்சி புரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்க ளில்  பகலில் பலத்தமழை பெய்யும் என்று வானிலை ஆய்வுமையம் தெரி வித்திருந்தது  மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவு கிறது. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வட தமிழக பகுதி களின் மேல் ஒரு வளிமண்டல கீழ டுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்னிந்திய பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்குப் பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் வியாழக்கிழமையும் திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பலத்த இடி மின்னலுடன் கூடிய மிதமான முதல் கன மழை பொழிய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில தினங்களாக கடுமை யான வெயில் அடித்து வந்த நிலை யில் காலை முதலே சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கன மழை பெய்ததது. குறிப்பாக எண்ணூர், திருவொற்றியூர், மணலி, மாதவரம், புழல், காசிமேடு, ராயபுரம், பாரிமுனை, சென்ட்ரல், எழும்பூர், நுங்கம்பாக்கம், கொளத்தூர், பெரம்பூர், அமைந்த கரை, அண்ணாநகர், வட பழனி, கோடம்பாக்கம், மெரினா, சைதாப் பேட்டை, ஈக்காட்டுதாங்கல், மதுர வாயல், வளரசவாக்கம், மீனம்பாக்கம், பல்லாவரம், பொழிச்சலூர், தாம்பரம் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்தது.