tamilnadu

விவசாயத்தையும் சுற்றுச்சூழலையும் பாதுகாக்க மக்கள் சந்திப்பு நடை பயணம்

விவசாயத்தையும் சுற்றுச்சூழலையும் பாதுகாக்க மக்கள் சந்திப்பு நடை பயணம்

கடலூர், செப்.26- விவசாயத்தையும் சுற்றுச்சூழலையும் பாதுகாக்க வெள்ளக்கரையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மக்கள் சந்திப்பு நடை பயணம் நடைபெற்றது. கடலூர் வட்டத்திற்குட்பட்ட மலையடிக்குப்பத்தில் 164 ஏக்கர் நிலங்களில் சாகுபடி செய்த முந்திரி, வாழை, மா, பலா, உன்னிட்ட பயிர்களை மாவட்ட நிர்வாகம் பிடுங்கி அழித்துவிட்டது. இதனை கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சி, விவசாயிகள் சங்கத்தின் சார்பில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அந்தப் பகுதியில் தோல் அல்லாத காலணி தொழிற்சாலை அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்திருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், விவசாயத்தையும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் அழித்துவிட்டு காலணி தொழிற்சாலை எதற்கு என்றும், மலை வளத்தையும், நீர் வளத்தையும், விவசாய நிலத்தையும், சுற்றுப்புற சூழலை பாதுகாத்திட கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் வெள்ளக்கரையில் தொடங்கி நடுவீரப்பட்டு வரை 25 கிலோ மீட்டர் மக்கள் சந்திப்பு பிரச்சாரம் நடைபெற்றது. வெள்ளக்கரையில் தொடங்கிய நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் எஸ்.தட்சணாமூர்த்தி தலைமை தாங்கினார். சிபிஎம் மாவட்ட செயலாளர் கோ.மாதவன் துவக்கி வைத்தார். மாநிலத் தலைவர் டி.ரவீந்திரன் உரையாற்றினார். சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஜி.ஆர்.ரவிச்சந்திரன், மாவட்டச் செயலாளர் ஆர்.கே.சரவணன், பொருளாளர் ஆர்.ராமச்சந்திரன், விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எஸ்.பிரகாஷ், பொருளாளர் டி.கிருஷ்ணன், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜே.ராஜேஷ் கண்ணன், ஒன்றியச் செயலாளர் ஆர்.பஞ்சாட்சரம், விவசாயிகள் சங்க ஒன்றியத் தலைவர் எம்.கடவுள், வாலிபர் சங்கம் ஒன்றியச் செயலாளர் எம்.கலைவாணன், விவசாய தொழிலாளர் சங்கத்தின் ஒன்றியச் செயலாளர் ஏ.வைத்திலிங்கம், தலைவர் என்.அய்யாதுரை உள்ளிட்ட கிராம மக்களும் கலந்து கொண்டனர்.