tamilnadu

img

அமோனியா வாயு கசிந்த ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி 42ஆவது நாளாக மக்கள் தொடர் போராட்டம்

சென்னை, பிப். 6- சென்னை எண்ணூரில் உள்ள  கோரமண்டல் உரம் தயாரிக்கும் தொழி ற்சாலையில் இருந்து அமோனியா வாயு கசிவு வெளியேறியதில் பாதிக்கப்பட்ட மக்கள் 42ஆவது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரு கின்றனர். போராடும் மக்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள், வியாபாரிகள் சங்கம், எண்ணூரில் உள்ள 33 கிராம மக்கள் மற்றும் குடியிருப்போர் நல சங்கங்கள், சமூக நல ஆர்வலர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் வாயு கசிவு குறித்து ஆராய தமிழ்நாடு அரசு தொழில்நுட்பக் குழு ஒன்றை அமைத்தது. அந்த குழு அரசிடம் தனது அறிக்கையை அரசிடம் அளித்துள்ளது. அதைத்தொடர்ந்து தொழில்நுட்பக் குழு பரிந்துரைகளை அமல்படுத்த அரசு  உத்தரவிட்டது. ஆனால் கோரமண்டல் தொழிற் சாலையில் ஏற்பட்ட அமோனியா கசிவு விபத்து பற்றிய விசாரணை அறிக்கை யை ஏற்க மறுத்து 33 எண்ணூர் கிராமங்களில் மறியல் போராட்டம் நடைபெற்றது

. மேலும் வணிகர்கள் முழு கடையடைப்பு நடத்தி போராடும் மக்க ளுக்கு ஆதரவு தெரிவித்தனர். இதுகுறித்து அவர்கள் கூறுகை யில், இந்தப் பேரழிவிலும் மக்கள்  பக்கம் நிற்க வேண்டிய மாசு கட்டுப் பாட்டு வாரியம் தொழிற்சாலைக்கு ஆதரவாக இருப்பது வேதனை யளிக்கிறது. எனவே அரசு நிரந்தரமாக ஆலையை மூடி சுற்றுச்சூழலையும், மக்களையும் பாதுகாக்க உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.