மக்கள் சந்திப்பு இயக்கம்
குடிமனைப்பட்டா உள்ளிட்ட மக்களின் வாழ்வாதார கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளியன்று (ஜூன் 13) பூபதி நகர், காமராஜ் காலனி பகுதிகளில் சிபிஎம் மக்கள் சந்திப்பு இயக்கம் நடைபெற்றது. கிளைச் செயலாளர் இராசைய்யா தலைமையில் நடைபெற்ற இந்த பிரச்சாரத்தில் தென்சென்னை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ச.லெனின், தி.நகர் பகுதிச் செயலாளர் எம்.குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.