சென்னை, ஜூலை 11- தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மற்றும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பணியாற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு வெள்ளியன்று(ஜூலை 12) முதல் 29 சதவீதம் ஊதியம் உயர்த்தி வழங்கப்படும் என்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவை யில் வியாழனன்று (ஜூலை 11) நடந்த கேள்வி நேரத்தின் போது, தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகம் மற்றும் நேரடி நெல் கொள் முதல் நிலையங்களில் பணி யாற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய அரசு நட வடிக்கை எடுக்குமா என செய்யாறு தொகுதி அதி முக எம்எல்ஏ தூசி மோகன் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த உணவுத்துறை அமைச்சர் காமராஜ், “தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மற்றும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மொத்தம் 20 ஆயிரத்து 28 சுமை தூக்கும் தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் தொழிலாளர்களுக்கு பச்சை நிற அட்டையும், அதற்கு குறைவாக உள்ளவர்களுக்கு இளம் சிவப்பு நிற அட்டையும் வழங்கப்பட்டுள்ளது. அதற்கும் குறைவான ஆண்டுகள் பணியாற்றி வரும் தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கி நிரந்தர தொழிலாளர்கள் என்ற அங்கீகாரம் வழங்கப் பட்டுள்ளது. அவர்களுக்கு நிரந்தர தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளுக்கு நிகராக, வருங்கால வைப்பு நிதி, பணிக்கொடை, ஆண்டுக்கு 10 நாட்கள் ஊதியத்து டன் கூடிய விடுமுறை, போனஸ், பொங்கல் சிறப்பு தொகை, கருணை தொகை உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இது தவிர ஒவ்வொரு தொழிலாளர்களுக்கும் 6 லட்சத்து 2 ஆயிரம் ரூபாய் அளவுக்கு காப்பீடு வழங்கி வருகிறோம். அனைத்து தொழிலாளர்களுக்கும் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதியம் மாற்றியமைக் கப்படுகிறது. வெள்ளியன்று முதல் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு 29 சதவீத ஊதியம் உயர்த்தி தரப்படும்” என்றார்.