tamilnadu

img

பாத்திர தொழிலாளர்கள் சம்பள உயர்வு உடன்பாடு ஏற்பட்டது

திருப்பூர், மார்ச் 3 - திருப்பூர் அனுப்பர்பாளையம் வட்டார பாத்திர தொழிலாளர் களுக்கு சம்பள உயர்வு பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற் பட்டது. திருப்பூர் அனுப்பர்பாளையம், ஆத்துப்பாளையம், திலகர்நகர், 15 வேலம்பாளையம், திருமுரு கன்பூண்டி மற்றும் சுற்று வட்டா ரத்தில் 300-க்கும் மேற்பட்ட பாத்திர பட்டறைகள் உள்ளன. அங்கு 5 ஆயிரத்திற்கும் மேற் பட்ட தொழிலாளர்கள் பணி யாற்றி வருகின்றனர். பாத்திர பட்டறைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 3 ஆண்டு களுக்கு ஒருமுறை சம்பள உயர்வு ஒப்பந்தம் நிறைவேற்றப் படுகிறது.  கடந்த 2017ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட சம்பள ஒப்பந்தம் கடந்த டிசம்பர் மாதம் 31ஆம் தேதி நிறைவடைந்தது. இதையடுத்து பாத்திர தொழி லாளர்களுக்கு புதிய சம்பள உயர்வு ஒப்பந்தம் தொடர்பான கோரிக்கையை உருவாக்கி, பாத்திர பட்டறை உரிமையா ளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தொழிற்சங்கங்களின் கூட்டுக்குழு அமைக்கப்பட்டது. தொழிற்சங்கங்கள் தரப்பில் எவர்சில்வர் பாத்திர தொழிலா ளர்களுக்கு 50 சதவீத சம்பள உயர்வும், பித்தளை, செம்பு மற்றும் வார்ப்பு பாத்திர தொழிலாளர்களுக்கு 60 சதவி கிதமும், ஈயப்பூச்சு பாத்திர தொழிலாளர்களுக்கு 70 சதவீத சம்பள உயர்வும் வழங்க வேண் டும் என்று கோரிக்கை வைக்கப் பட்டது. 

ஜனவரி 27ந்தேதி முதல் தொழிற்சங்க கூட்டமைப்பு நிர்வாகிகள் மற்றும் பாத்திர உற்பத்தியாளர் சங்க நிர்வாகிகள் இடையே பல கட்டங்களாக பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. ஒவ்வொரு கட்ட பேச்சு வார்த்தையிலும் இருதரப்பிலும் சற்று முன்னேற்ற காணப்பட்டு, சுமூகமாகவே நடைபெற்று வந்தது. கடந்த 25-ந்தேதி நடை பெற்ற பித்தளை பாத்திர தொழி லாளர்களுக்கான 5ஆம் கட்ட பேச்சுவார்த்தையின் போது பித்தளை, செம்பு, வார்ப்பு பாத் திர தொழிலாளர்களுக்கு 30 சதவிகிதமும், ஈயப்பூச்சு பாத்திர தொழிலாளர்கக்கு 40 சதவிகித மும் சம்பள உயர்வு வழங்க உற்பத்தியாளர்கள் சங்கம் தரப்பில் சம்மதம் தெரிவிக்கப் பட்டது. இதையடுத்து இருதரப் பிற்கும் இடையிலான சம்பள உயர்வு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து எவர்சில் வர் பாத்திர தொழிலாளர்க ளுக்கு 6ஆம்கட்ட பேச்சு வார்த்தை செவ்வாயன்று நடை பெற்றது. உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் ராயப்பன், செயலாளர் கதிரேசன், பொரு ளாளர் ராஜேந்திரன் மற் றும் நிர்வாகிகள் மணி, குமாரசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். இதேபோல் தொழிற்சங்கங்கள் சார்பில் கே.ரங்கராஜ், கே.குப்புசாமி (சிஐடியு), தேவராஜ், பாலசுப்பி ரமணியம் (ஏடிபி), வேலுச்சாமி, தர்மலிங்கம் (எல்பிஎப்), செல்வ ராஜ் நாகராஜ் (ஏஐடியுசி), திரு ஞானம், சுப்பிரமணியம் (எச்எம் எஸ்), ஈஸ்வரன், பாண்டியராஜ் (ஐஎன்டியுசி), சீனிவாசன், லட் சுமி நாராயணன் (பிஎம்எஸ்), முத்துகிருஷ்ணன், அர்ஜூனன் (காமாட்சியம்மன் பாத்திர சங்கம்) ஆகியோர் கலந்து கொண்டனர்.  அப்போது உற்பத்தியாளர்கள் தரப்பில் 21 சதவீத சம்பள உயர்வு வழங்குவதாக தெரிவித்தனர். இதற்கு தொழிற்சங்கங்கள் சம்மதம் தெரிவித்தன. இதை யடுத்து எவர்சில்வர் பாத்திர தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு ஏற்பட்டது. இந்த சம்பள உயர்வு முந்தைய ஒப்பந்தம் முடிவடைந்த ஜனவரி 1ஆம் தேதி முதல் கணக்கிட்டு அமலுக்கு வரும் என்றும் இருதரப்பினர் தெரிவித்துள்ளனர். கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற சம்பள உயர்வு பேச்சுவார்த்தை 60 நாட்கள் வேலைநிறுத்தத்திற்கும் பின்பும், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற பேச்சுவார்த்தை 62 நாட்கள் வேலைநிறுத்த போராட்டத்திற்கு பிறகே உடன் பாடு ஏற்பட்டது. ஆனால் நீண்ட காலத்திற்கு பிறகு வேலை நிறுத்த போராட்டமின்றி சுமூக பேச்சுவார்த்தையின் மூலம் சம் பள உயர்வு உடன்பாடு ஏற்பட் டுள்ளது குறிப்பிடத்தக்கது.  இந்த சம்பள உயர்வு உடன் பாடு ஏற்பட்டதற்கு பாத்திரத் தொழிலாளர்கள் மகிழ்ச்சி தெரி வித்துள்ளனர். இதையடுத்து விரைவில் தொழிலாளர் நலத் துறை துணை ஆணையர் முன்னி லையில் சட்டப்படி முத்தரப்பு ஒப்பந்தமாக நிறைவேற்றப்படும் என்றும் பாத்திரத் தொழில் துறையினர் தெரிவித்தனர்.