சென்னை, பிப். 7 - தில்லியில் கேரள அரசு நடத்தும் உரிமைப் போராட்ட த்தின் ஒருபகுதியாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வியாழனன்று நாடுமுழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன. தமிழ்நாட்டில் நடைபெறும் போராட்ட த்தில் திமுக தலைமையிலான மதச்சார் பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் தலைவர்கள், அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏ-க்களும் பங்கேற்கின்றனர்.
இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது:
மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசு தொடர்ந்து மாநில உரிமைகள் மீது தாக்குதலைத் நடத்தி வருகிறது. எதிர்க்கட்சிகள் ஆளக் கூடிய மாநிலங் களுக்கு உரிய நிதி பகிர்வை அளிக்க மறுப்பது, பேரிடர் நிவாரண நிதியை ஒது க்க மறுப்பது, ஜி.எஸ்.டி. வரியில் உரிய பங் கீட்டை அளிக்க மறுப்பது, மாநிலங்களின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடுவது என கூட்டாட்சி கோட்பாட்டிற்கு விரோதமான நடவடிக்கைகளை கையாண்டு வருகிறது. அதுமட்டுமின்றி, மாநில ஆளுநர்களை பயன்படுத்தி சட்டப்பேரவையில் நிறை வேற்றும் மசோதாக்களுக்கு ஒப்புதல் தர மறுப்பது, மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட அரசாங்கத்திற்கு எதிராக போட்டி அரசாங்கமாக செயல்பட வைப்பது உள்ளி ட்ட ஜனநாயக விரோத- எதேச்சதிகார நடவடிக்கைகளையும் ஒன்றிய பாஜக அரசு மேற்கொண்டு வருகிறது.
இவற்றுக்கு எதிராக வியாழ னன்று (8.2.2024) புதுதில்லியில் கேரள முதல்வர் பினராயி விஜ யன் தலைமையில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் கலந்து கொள்ளும் மாபெரும் தர்ணா போராட்டம் நடைபெறுகிறது.
மாநில உரிமைகளையும், கூட்டாட்சி கோட்பாட்டையும் பாதுகாக்கும் இந்த மகத்தான போராட்டத்திற்கு தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளார். இதற்கு கேரள முதலமைச்சரும் நன்றி தெரிவித்துள்ளார். இதையொட்டி, ஒன்றிய அரசின் நாசகர நடவடிக்கையினை கண்டித்து வியாழ னன்று (8.2.2024) நாடு முழுவதும் கண்டன இயக்கங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்த உள்ளது. தமிழ்நாட்டிலும் அனைத்து மாவட்டங்களிலும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறு கின்றன.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகளான திராவிட முன்னேற்ற கழகம், திராவிடர் கழகம், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி, கொங்கு தேசிய மக்கள் கட்சி மற்றும் ஆம் ஆத்மி கட்சி உள்ளிட்ட தோழமை கட்சி களின் மாநிலத் தலைவர்கள், மாவட்டங்களில் செயல்படும் முக்கியத் தலைவர்கள், நிர்வாகி கள் மற்றும் மாநில அமைச்சர்கள், நாடாளு மன்ற - சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் பங்கேற்று கண்டன உரை நிகழ்த்தவுள்ளனர். பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்க உள்ளனர்.
திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, சிபிஎம் சார்பில் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், திமுக சார்பில் நகர்ப்புற உள்ளாட்சித்துறை அமைச்சர் கே.என். நேரு, சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி. கீதாஜீவன், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்ட அமைச்சர் பெருமக்கள், சிபிஐ மாநிலச் செய லாளர் ஆர். முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் டி. ரவிக்குமார் எம்.பி., துணைப்பொதுச் செய லாளர் வன்னியரசு, மதிமுக பொருளாளர் செந்திலதிபன், ஆம் ஆத்மி கட்சி மாநிலத் தலைவர் வசீகரன் உள்ளிட்ட சட்டமன்ற - நாடாளுமன்ற உறுப்பினர்கள், தோழமைக் கட்சியின் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
மாநில உரிமைகள், கூட்டாட்சி கோட்பாட்டை பாதுகாக்கவும், ஆளுநர் களின் ஜனநாயக விரோத நடவடிக்கை களை கண்டித்தும் நடைபெறும் இப்போராட்டத் திற்கு தமிழக மக்களும், ஜனநாயக சக்தி களும் பேராதரவு தர வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டு கிறது.
இவ்வாறு கே. பாலகிருஷ்ணன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.