கள்ளக்குறிச்சி, நவ. 30- கள்ளக்குறிச்சியில் மாவட்டம் உதயமாகியதையடுத்து குறைதீர் கூட்டம் திங்களன்று (டிச. 2) நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் கிரண்குராலா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கள்ளக்குறிச்சி பச்சிராயபாளைய்ம் சாலையில் உள்ள தற்காலிக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகே) குறைதீர்வு கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் அனை வரும் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை தெரிவுக்குமாறும், மனு அளிக்குமாறும் கூறப்பட்டுள்ளது.