சென்னை:
தமிழ்நாடு மருத்துவக் கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் முதுகலை படிப்பு படித்து முடிக்கும் மாணவர்கள் இரண்டு ஆண்டுகள் அரசு மருத்துவமனைகளில் பணிபுரிய வேண்டும் என்ற உத்தரவு செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அகில இந்திய ஒதுக்கீட்டின் மூலம் தமிழ்நாடு மருத்துவக் கல்லூரிகளில் இடம் பெறக்கூடிய வெளிமாநில மாணவர்கள் இரண்டு ஆண்டுகள் இங்குள்ள அரசு மருத்துவமனை யில் பணிபுரிய வேண்டும் என்று தமிழ்நாடு அரசு நிபந்தனை விதித்துள்ளது.அரசின் இந்த நிபந்தனையை தனி நீதிபதி ரத்து செய்ததால் அதை எதிர்த்து தமிழ்நாடு அரசு மேல் முறையீடு செய்தது. இந்த வழக்கில், இரண்டு ஆண்டுகள் பணிபுரிய தேவையில்லை என்ற தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து தமிழ்நாடு அரசின் நிபந்தனை செல்லும் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.