tamilnadu

பரந்தூர் விமான நிலையம்

சென்னை,நவ.24-
 சென்னையின் 2-வது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைய உள்ளது. இதற்கு சுற்றி உள்ள கிராமங்களில் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளது. விவசாய நிலங்களை கையகப்படுத்த பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் பரந்தூர் விமான நிலை யத்திற்கு நிலங்களை கையகப்படுத்த தமிழக அரசு ஒப்புதல் அளித்து அரசாணை வெளி யிட்டு உள்ளது.

பரந்தூர் சுற்றி உள்ள 20 கிராமங்களில்  மொத்தம் 5746 ஏக்கர் நிலம் கையகப்படுத் தப்பட்ட உள்ளது. இதற்காக அரசு ரூ.19.24 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.