சென்னை, செப்.4- தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனை களில் டெங்கு சிறப்பு வார்டு அமைக்க வும் சிகிச்சை பெறும் நோயாளிகளின் விவரம், மருந்து கையிருப்பு விவரங் களை வழங்கவும் மருத்துவத்துறை உத்தரவிட்டுள்ளது. டெங்கு பாதிப்பை எதிர்கொள்ள சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது. டெங்குவால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு 40 படுக்கைகள் ஒதுக்கப் பட்டுள்ளன.