பாஜக உடனான கூட்டணிக்கு எதிர்ப்பு
தமாகா தலைமை நிலைய செயலாளர் விலகல்
பாஜகவுடன் தமிழ் மாநில காங்கி ரஸ் கட்சியின் தலைமை நிலைய செயலா ளர் டி.என். அசோகன் அக்கட்சியில் இருந்து விலகியுள்ளார்.
“பாரம்பரிய காங்கிரஸ் குடும்பத் தைச் சார்ந்தவன்; என் தந்தை ஒரு சுதந் திர போராட்ட தியாகி என்ற நிலையில், பாஜகவுடன் கூட்டணி என்று தாங்கள் எடுத்துள்ள முடிவு எனக்கு உளவியல் ரீதியாக ஏற்புடையதாக இல்லை. எனவே கனத்த இதயத்துடன் தங்களின் மேலான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியிலிருந்து இன்று (26.02.2024) முதல் விலகிக் கொள்ள முடிவு செய்துள்ளேன். என்னு டைய முடிவை ஏற்றுக் கொள்ளும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்” என தலைமை நிலைய செயலாளர் அசோ கன் தெரிவித்துள்ளார்.
எங்களை வழிநடத்தப் போவதே வாசன்தான்
அண்ணாமலை ஐஸ்
தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் பாஜக தோற்கப் போகிறது என்பது தெளிவாகத் தெரிந்தும் அக்கட்சியோடு கூட்டணி சேர்ந்துள்ளது தமாகா. தற்கொலை செய்யப் போகிறவருக்கு துணைக்கு ஆள் கிடைத்தது போல, பாஜக இதனால் மகிழ்ச்சியடைந்துள் ளது.
அந்த மகிழ்ச்சியில் பேசியிருக்கும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணா மலை, அரசியல் ரீதியான ஆலோசனை களை பெறும் தலைவர்களில் ஜி.கே.வாசனும் ஒருவர். பாஜக கூட்டணியில் முதல் நபராகக் காலைப் பதித்துள்ளார் ஜி.கே.வாசன். தமிழகத்தில் வலிமை யான கூட்டணி, வளமான தமிழகம், உறு தியான பாரதம் அமையும். வாசனின் வழிகாட்டுதல் அடுத்த 100 நாட்களுக்கு தேவை என ஐஸ் வைத்துள்ளார்.
பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசனுக்கு
காங்கிரசில் பதவி
தமிழக காங்கிரஸ் ஊடகம் மற்றும் செய்தித் தொடர்புத் துறையின் தலை வராக பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார். யூடியூப் வீடியோக்கள் மூலம் இளை ஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவ ராக இருப்பவர் பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன் என்பது குறிப்பி டத்தக்கது. அவருக்கு காங்கிரஸ் தலை வர் செல்வப்பெருந்தகை வாழ்த்து தெரி வித்துள்ளார்.