தீயணைப்பு துணை இயக்குநர் அலுவலகம் திறப்பு
விழுப்புரம், செப். 22 - தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக்காட்சி வாயிலாக தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் விழுப்புரம் இ.எஸ் கார்டன் பகுதியில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மண்டல துணை இயக்குநர் அலுவலகத்தை திறந்து வைத்ததை தொடர்ந்து, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான், விழுப்புரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இரா.இலட்சுமணன் முன்னிலையில் பயன்பாட்டிற்கு கொண்டுவந்தனர். அப்போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன், தீயணைப்பு துறை விழுப்புரம் மண்டல துணை இயக்குநர் க.தென்னரசு, திருச்சி மத்திய மண்டல துணை இயக்குநர் க.முரளி, மாவட்ட தீயணைப்பு அலுவலர்கள் தபாஸ்கரன் (விழுப்புரம்), அனுசியா (கள்ளக்குறிச்சி) உட்பட பலர் கலந்து கொண்டனர்.