சென்னை,ஜூலை 12- சென்னை மேடவாக்க த்தில் 1.5 ஏக்கர் பரப்பளவில் கங்காரு கிட்ஸ் எஜூகேஷன் நிறுவனத்தின் சார்பில் 3வது பில்லாபோங் சர்வதேச பள்ளி திறக்கப்பட்டுள்ளது. நியூரோ சயின்ஸ், தகவல் தொழில்நுட்பம் உள்பட மாணவர்களின் ஒட்டு மொத்த வளர்ச்சிக்கு ஏற்ற கல்வி முறை இங்கு பயிற்று விக்கப்படுவதாக வும் இந்தாண்டு இதுவரை 200க்கும் மேற்பட்ட மாண வர்கள் சேர்க்கை நடை பெற்றுள்ளதாகவும் பள்ளி யின் செய்திக்குறிப்பு தெரி விக்கிறது. இந்த புதிய பள்ளியை கங்காரு கிட்ஸ் எஜூகேஷன் நிறுவனர் லினா ஆஷர் திறந்துவைத்தார். பள்ளி யின் முதல்வர் வி.வெங்கடா ச்சலம்,ஐஐடி சென்னை பேராசிரியர் எஸ்.கர்மால்கர், இந்து பத்திரிகையின் மூத்த உதவி ஆசிரியர் டாக்டர் சுசித்ரா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மாணவர்களின் விளையாட்டுத் திறனை வெளிக்கொனர உள்ளரங்க மற்றும் வெளிஅரங்க விளையாட்டு திடல், நவீன அறிவியல் ஆய்வகம், ஸ்கேட்டிங் தளம், நீச்சல் குளம், நடனம்,இசை, ஓவியம் கற்றுக்கொள்ள தனி பயிற்சி நிலையம் உள்ளிட்ட வசதிகள் பள்ளியில் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக நிறுவனர் லினா ஆஷர் தெரிவித்தார்.