tamilnadu

img

பல்வேறு துறைகளின் கட்டடங்கள் திறப்பு...

சென்னை:
47 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வேளாண்மைத் துறை கட்டடங்களை காணொலிக் காட்சி மூலமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

மதுரை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 2,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட இயந்திரங்களுடன் கூடிய சேமிப்புக் கிடங்கினையும் அவர் திறந்துவைத்தார்.திருவள்ளுவர் பல்கலைக் கழக வளாகத்தில் 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டினார். பல்வேறு கல்லூரிகளுக்கு 58 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை திறந்து வைத்தார்.காவலர் குடியிருப்புகள், காவல் நிலையங்கள் உள்ளிட்டவற்றையும் திறந்து  வைத்தார்.