tamilnadu

img

கல்லூரியில் சானிட்டரி நாப்கின்கள்  தயாரிக்கும் ஒரு தொழில் மையம் திறப்பு

சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள டாக்டர் எம்ஜிஆர்-ஜானகி மகளிர் கலை அறிவியல் கல்லூரியில், புதிதாக சானிட்டரி நாப்கின்கள்  தயாரிக்கும் ஒரு தொழில் மையத்தை மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் ஆர். நடராஜ் தொடங்கி வைத்தார். சென்னை வடக்கு  ரோட்டரி சங்கத்தின் முன்முயற்சியில், தொடங்கப்படும் “கண்ணம்மா” திட்டத்தின் கீழ், இந்த தொழில் மையத்தில் குறைந்த விலையில் சானிட்டரி நாப்கின்கள் தயாரிக்கப்பட உள்ளன. இந்நிகழ்ச்சியில் சர்வதேச ரோட்டரி சங்கத்தின்  திட்ட இயக்குனர் கமல் சாங்வி, கோவையைச் சேர்ந்த ஜெயசிறீ இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர்  அருணாசலம் முருகானந்தம், ரோட்டரி சங்கத்தின் 3232 மாவட்ட நிர்வாகி ஜி. சந்திரமோகன் மற்றும் சத்யபாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்விக் கூடத்தின் வேந்தர்,  மரியஸீனா ஜான்சன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.