tamilnadu

img

வரும் 13ம் தேதி முதல் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள்

அரசு பள்ளிகளில் வரும் 13ம் தேதி முதல் ஆன்லைன் வகுப்புகள் நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஏ.கே செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 
நாடு முழுவதும் கொரோனா தொற்றை தடுக்கும் வகையில் ஊரடங்கு அமலில் உள்ளது. குறிப்பாக தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில் தற்போது வரை பள்ளிகள் திறக்கப்பட வில்லை. இச்சூழலில் தனியார் பள்ளிகள் ஆன்லைன் வழியாக மாணவர்களுக்கு பாடங்களை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் அரசு பள்ளிகளில் வரும் 13-ந்தேதி முதல் ஆன்லைன் கல்வி முறை தொடங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:-
தனியார் பள்ளிகள் போன்று அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் வரும் 13-ந்தேதி  முதல் ஆன்லைனில் பாடம் கற்பிக்கப்படும். பாடப்புத்தகங்களை வழங்கியவுடன் ஆன்லைன் கல்வி திட்டம் செயல்பாட்டிற்கு வரும். 12-ம் வகுப்பில் இறுதித் தேர்வு எழுதாத 34,482 மாணவர்களின் 718 மாணவர்கள் தேர்வு எழுத ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 718 மாணவர்களுக்கு இன்று மாலைக்குள் தேர்வு தேதியை முதல்வர் அறிவிப்பார். இறுதித் தேர்வு முடிந்தவுடன் 4 நாட்களில் முடிவுகள் வெளியிடப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.