tamilnadu

img

முதல்வர் பயணத்தின் முதல் நாளில் ரூ.900கோடி முதலீட்டிற்கு ஒப்பந்தம்!

சென்னை, ஆக. 30 - தொழில் முதலீடுகளை ஈர்க்க 17  நாட்கள் அரசுமுறைப் பயணமாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அமெரிக்கா சென்றுள்ளார்.

இந்நிலையில், சான் பிரான் சிஸ்கோ நகரில் முதல்வர் முன்னி லையில் வியாழக்கிழமை நடை பெற்ற முதல் நாள் முதலீட்டாளர் கள் மாநாட்டில் 6 முன்னணி நிறு வனங்கள் ரூ. 900 கோடி முதலீட் டில் தமிழகத்தில் தங்களது நிறுவனங் களை தொடங்க புதிய ஒப்பந்தங் களில் கையெழுத்திட்டுள்ளன.

இது தொடர்பாக தமிழக அரசு  செய்தியறிக்கை ஒன்றை வெளி யிட்டுள்ளது. அதில், “முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் வியாழக்கிழமை (29.8.2024) அமெரிக்காவின் சான் பிரான் சிஸ்கோ நகரில் நடைபெற்ற முத லீட்டாளர்கள் மாநாட்டில், உலகின் முன்னணி தொழில் நிறுவனங் களான நோக்கியா, பேபால், ஈல்ட்டு  இன்ஜினியரிங் சிஸ்டம்ஸ், மைக் ரோசிப் டெக்னாலஜி, இன்பிங்ஸ் ஹெல்த்கேர் மற்றும் அப்ளைடு மெட்டீரியல்ஸ் ஆகிய 6 நிறுவனங் களுடன் 900 கோடி ரூபாய் முத லீட்டில் சென்னை, கோவை மற்றும் மதுரையில் 4,100 நபர்களுக்கு  வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங் கள் மேற்கொள்ளப்பட்டன” எனக் கூறப்பட்டுள்ளது.

இதுபற்றித் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் தன்னுடைய ‘எக்ஸ்’ பக்கத்திலும் பதிவொன்றை  வெளியிட்டுள்ளார்.

இந்தப் பதிவில், “சென்னை,  கோயம்புத்தூர், மதுரை மற்றும்  செங்கல்பட்டு ஆகிய மாவட்டங் களில் சுமார் ரூ. 900 கோடிக்கும் அதிகமான முதலீடுகளில் 4,100 புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்க ப்படவுள்ளன.

கோவை சூலூரில், ரூ. 150 கோடி முதலீட்டில் செமி கண்டக்டர் உற்பத்தி தொழிற்சாலையை அமைக்க ஈல்ட்டு இன்ஜினியரிங் சிஸ்டம்ஸ் (Yield Engineering Systems) நிறுவனத்துடன் புரிந்து ணர்வு ஒப்பந்தம் கையெழுத்தா னது. இதன் மூலம் 300 வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்.

சென்னை செம்மஞ்சேரியில், ரூ. 250 கோடி முதலீட்டில் செமி கண்டக்டர் தொழில்நுட்பம் சார்ந்த ஆராய்ச்சி மையம் அமைக்க மைக்ரோசிப் டெக்னாலஜி (Micro chip) நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் மூலம் 1,500 வேலைவாய்ப்பு கள் உருவாக்கப்படும்.

சென்னை தரமணியில் புதிதாக  செமி கண்டக்டர் உற்பத்திக்கான தொழில்நுட்ப மையம் அமைக்க அப்ளைடு மெட்டிரியல்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்தானது. ஏஐ  தொழில்நுட்பத்துடன் அமையும் இந்த தொழில்நுட்ப மேம்பாட்டு  மையம் மூலம் 500 புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படு கின்றன.

சென்னை அடுத்த சிறுசேரியில் நோக்கியா நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் அமைகிறது. இதற்காக 450 கோடி ரூபாய் மதிப்பில் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதன்மூலம் 100 பேருக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.

இதேபோல், சென்னையில் ஏஐ தொழில்நுட்ப மையம் அமைக்க பே பால் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. செங்கல் பட்டில் புதிய மின்சாதன உபகரண ஆலை அமைக்க ஒமியம் நிறு வனத்துடன் 400 கோடி ரூபாயில் ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் மூலம் 500 பேருக்கு வேலைவாய்ப்பு கள் கிடைக்க உள்ளன.

மதுரை வடபழஞ்சியில் புதிய தொழில்நுட்ப மையம் அமைக்க இன்பின்க்ஸ் நிறுவனத்துடன் 50  கோடி ரூபாயில் ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இதன்மூலம், மதுரையில் 700 புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப் பட உள்ளன.

சுற்றுப் பயணம் முடிய இன்னும்  இரண்டு வாரங்கள் உள்ள நிலை யில், தொடர்ந்து முனைந்து, அதிக  முதலீட்டாளர்களைத் தமிழ்நாட்டி ற்கு ஈர்த்து, ஒரு டிரில்லியன் டாலர்  பொருளாதாரத்தை நோக்கிய எங்கள் பயணத்தை முன்னெடு த்துச் செல்கிறோம்.” 

இவ்வாறு மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.