tamilnadu

வயநாடு விரைந்த தமிழ்நாடு குழு; மீட்புப் பணிகளில் அதிகாரிகள்

சென்னை, ஜூலை 31- கேரள மாநிலம், வயநாட்டில் நிலச்சரிவு, இத்துயர சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் மீட்பு பணியில் ஈடுபடு வதற்காக தமிழ்நாட்டில் இருந்து 50 பேர் கொண்ட குழு புதனன்று (ஜூலை 31) அதிகாலை 4 மணிக்கு கேரளாவுக்கு சென்றடைந்தனர். அங்கு கேரள அதிகாரிகளுடன் மீட்பு பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினர். 

தமிழ்நாடு மீட்புக் குழுவில் இடம்பெற்றுள்ள தீயணைப்பு துறை இயக்குநர் தலைமையிலான 20 தீயணைப்பு வீரர்கள், காவல் கண்காணிப் பாளர் தலைமையில் 20 மாநிலப் பேரிடர் மேலாண்மை மீட்புக் குழு வீரர்கள், 10 மருத்து வர்கள் மற்றும் செவிலியர்கள் புதனன்று காலை 10 மணியளவில் மீட்புப் பணிகளில் களமிறங்கினர். இவர்களுக்கு தேவையான உபகரணங்கள் கோவையில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தமிழர் குடும்பத்திற்கு நிவாரணம்

வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த நீல கிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் குடும்பத்தின ருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்டம் பந்தலூர் வட்டம், சேரங்கோடு 1 கிராமம், கொல்லி அட்டி, அம்பேத்கர் நகரைச் சேர்ந்த கல்யாணகுமார் (52)  உயிரிழந்துள்ளார். அதேபோல், காளி தாஸ் என்பவரும் உயிரிழந்தார். இருவர் குடும்பத்திற்கும் தலா ரூ.3 லட்சம் முத லமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தர விட்டுள்ளார்.