tamilnadu

img

கடலோரப் பாதுகாப்புப் படையின் 6வது ஆழ்கடல் ரோந்துக் கப்பல்

சென்னை, பிப்.27 சென்னையை அடுத்த காட்டுப்பள்ளியில் உள்ள எல் & டி கப்பல் கட்டும் நிறுவன வளாகத்தில் நடை பெற்ற வண்ணமயமான விழாவில், இந்திய கட லோரப் பாதுகாப்புப் படை யின்  6-வது ஆழ்கடல் ரோந்துக் கப்பலின் சேவையை,  மத்திய கப்பல் துறை, ரசாயனம்  & உரத் துறை இணை அமைச்சர்  மன்சுக் மண்டாவியா வியாழ னன்று (பிப்.27) தொடங்கி வைத்தார்.  படையின் தலைமை இயக்குநர் திரு கே நடராஜன், கிழக்கு பிராந்திய ஐ.ஜி. எஸ் பரமேஷ் மற்றும் உயர் அதிகாரிகள் இந்த விழாவில் கலந்து கொண்ட னர்.   பாதுகாப்பு அமைச்ச கத்திற்கும், எல் & டி நிறுவனத்திற்கும் இடையே கடந்த 2015 ஆம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி,  எல் & டி நிறுவனத்தால் கட்டப்படும் 7 ஆழ்கடல் ரோந்துக் கப்பல் களில், இது 6-வது கப்பலா கும்.   இந்த ரோந்துக் கப்பல், விரிவான பரிசோதனை களுக்குப் பிறகு, வரும் அக்டோபர் மாதம் கடலோரப் பாதுகாப்புப் படை யில் முறைப்படி பணியில் ஈடுபடுத்தப்படும். 98 மீட்டர் நீளம் 15 மீட்டர் அகலமுடைய இந்தக் கப்பலின் மொத்த எடை 2,100 டன் ஆகும். இந்தக் கப்பல் 5,000 கடல் மைல் தொலை வுக்கு செல்லக் கூடியதாகும். தலா 9,000 கிலோ வாட் திறன் கொண்ட இரட்டை டீசல் எஞ்சின்களால் இயக்கப்படும் இந்தக் கப்பல்,  குறைந்த எரி பொருள் செலவில் அதிக பட்சமாக மணிக்கு 26 கடல் மைல் வேகத்தில் செல்லும்.  இந்தக் கப்பலில் சி.ஆர்.என்-91 மற்றும் இரண்டு 12.7 மிமீ துப்பாக்கிகள் பொருத்தப்பட்டிருப்பதுடன், இரட்டை எஞ்சின் பொருத் தப்பட்ட ஹெலிகாப்டர் தரையிறங்கும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.  இந்த ரோந்துக் கப்பல், பகல் மற்றும் இரவுநேர ரோந்து,  கண்காணிப்பு பணிக்கும், சிறப்பு பொருளா தார மண்டலம் மற்றும் கடலோரப் பாதுகாப்பிற் குட்பட்ட பகுதிகளில், தீவிரவாத எதிர்ப்பு, கடத்தல் தடுப்புப் பணிகளிலும் ஈடு படுத்தப்படும்.கடலோரப் பாதுகாப்புப் படையின்