tamilnadu

img

குழந்தைகள் மற்றும் பெண்களின் ஆரோக்கியத்தை பேணுகிறது தாய்ப்பால்

சென்னை,ஆக.3  உலக தாய்ப்பாலூ ட்டல் வாரம் அனுசரிப்பை யொட்டி, தாய்ப்பாலூட்டல் மற்றும் தாய்ப்பால் சுரப்பு மீது ஒரு பிரத்யேகமான, சிறப்பு அமர்வை அடை யாறு ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனை  நடத்தியது.  இந்த அமர்வில் புதிய தாய்மார்களும், பிரசவத்தை எதிர்பார்த்து ஆவலோடு காத்திருக்கும் பெண்களும் அவர்களது கணவர்கள் மற்றும் பெற்றோர்களோடு ஆர்வத்தோடு கலந்து கொண்டனர். இத்துறையில் வல்லுனர்களானடாக்டர் ஜெயசிறீ ஜெயகிருஷ்ணன், பால்சுரப்பியல் சிறப்பு நிபுணர், டாக்டர் பிரேமலதா, மகப்பேறியல் சிறப்பு நிபுணர் ஆகியோர், இந்த அமர்வில் தாய்ப்பாலூட்டலில் இருக்கும் சவால்கள், போது மான அளவு தாய்ப்பால் ஊட்டாத நிலையில் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் தாய்ப்பாலூட்டலை பின்பற்றுமாறு வலியுறுத்த வேண்டியதன் அவசியம் ஆகிய மிக முக்கிய தலைப்பு களின் கீழ் உரையாற்றினர்.   இளம் தாய்மார்கள், அவர்களது தாய்ப்பாலூ ட்டல் அனுபவங்களை பகிர்ந்துகொண்ட மற்றும் தாய்ப்பாலூட்டல் குறித்தும் மற்றும் அதன் நடைமுறை சவால்கள் குறித்தும் பல்வேறு கேள்விகளை எழுப்பிய ஒரு திறந்தநிலை கலந்துரையாடல் இந்த அமர்வில் அதிக ஆர்வ மூட்டுவதாக அமைந்தது.   இது குறித்து பேசிய டாக்டர் ஜெயசிறீ ஜெய கிருஷ்ணன், பிரசவத்திற்குப் பிந்தைய காலகட்டத்தில் தாய்மார்கள் சிறப்பான தாய்ப்பாலூட்டல் நிலையை எட்ட உதவவேண்டும் என்பதற்காக குடும்பத்தினர் உரிய பங்களிப்புடன் இதில் ஈடுபட வேண்டும் என்பதை  வலியுறுத்துகிறோம் என்றார். உகந்த அளவு தாய்ப்பாலூட்டலானது, குழந்தைகள் மற்றும் தாய்மார்கள் ஆகிய இரு தரப்பினருக்கும் நேர்மறை யான விளைபயன்களை வழங்குவதால், குழந்தை களுக்கு ஊட்டச்சத்து குறைவு ஏற்படாமல் தடுக்கப்படுகிறது. பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை பேணுவதில் தாய்ப்பால் முக்கிய பங்காற்றுகிறது என்றும் அவர்  கூறினார்.