சாதி மதங்களுக்கு அப்பாற்பட்டு, தாய்க்கு நிகரான அன்பும் பரிவும் கொண்டு, பொறுமையுடன் ஆற்றும் அரும்பணிதான் செவிலியர் பணி. செவிலியர் பணி என்பது தொழில் அல்ல, ஊதியத்திற்கு அப்பாற்பட்ட தொண்டு. நோயாளிகளைத் தேற்றும் தாய் உள்ளம் கொண்ட செவிலியர்கள் தாய்க்கு நிகரானவர்கள். உலக செவிலியர் நாள் மற்றும் அன்னையர் நாள் வாழ்த்துக்கள் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.