“இப்போது தேர்தல் என்பதால் சும்மா பாஜகவும் அதிமுகவும் தனித் தனியாக இருப்பது போலக் காட்டிக் கொள்கின்றனர். தேர்தலுக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி மோடியை ஆதரிக்கப் போகிறார். திமுக - அதிமுகவால் வளர்ந்த மாநிலம் தமிழ்நாடு. அதனை மோடி திட்டமிட்டு கீழே தள்ளப் பார்க்கிறார். இந்த மோடியைத் தான் அதிமுக மறைமுகமாக ஆதரிக்கிறது. எனவே மோடியை வீழ்த்த அதிமுக தொண்டர்களும் திமுக அணியோடு கைகோர்க்க வேண்டும்” என்று கொமதேக தலைவர் ஈ.ஆர். ஈஸ்வரன் எம்எல்ஏ அழைப்பு விடுத்துள்ளார்.