பரந்தூர் விமான நிலையம்
61 ஹெக்டேர் நிலம் எடுக்க அறிவிப்பு
சென்னை, ஆக. 28 - சென்னை அருகே புதிய விமான நிலையம் அமைய உள்ள பரந்தூரில் 61 ஹெக்டேர் நிலம் எடுப்பதற்கான அறிவிப்பு வெளியீடு செய்யப்பட்டது.
தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில், இந்த நிலம் எடுப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பரந்தூர் புதிய விமான நிலையத் திட்டத்தை எதிர்த்து, ஏகனாபுரத்தில் தொடர் போராட்டம் நடக்கும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
ஹஜ் குழு உறுப்பினராக காங். எம்எல்ஏ தேர்வு!
சென்னை, ஆக. 28- தேசிய ஹஜ் கமிட்டி உறுப்பினராக சென்னை வேளச்சேரி தொகுதி சட்ட மன்ற காங்கிரஸ் உறுப்பினர் ஹசன் மவுலானா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு சார்பில் தேசிய ஹஜ் கமிட்டி உறுப்பினர் பதவிக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் ஹசன் மவுலானா மட்டுமே மனு தாக்கல் செய்திருந்தார். வேறு யாரும் போட்டியிடவில்லை.
எனவே, அவர் போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி லட்சத்தீவு ஆகிய பகுதிகளை கொண்ட 6-ஆவது மண்டலத்தின் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட ஹசன் மவுலானா, முன்னாள் காங்கிரஸ் எம்.பி. ஜே.எம். ஆரூணின் மகன் ஆவார்.
துணை கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கலாம்
சென்னை, ஆக. 28 - தமிழகத்தில் பொறியியல் படிப்பு துணை கலந்தாய்வுக்கு ஆகஸ்ட் 28 முதல் www.tneaonline.org, www.dte.tn.gov.in என்ற இணையதளங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த கலந்தாய்வு க்கு விண்ணப்பிக்க செப்டம்பர் 4 கடைசி நாள் என தொழில்நுட்ப கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
தடை செய்யப்பட்ட மருந்துகளை விற்றால் கடும் நடவடிக்கை!
தமிழக அரசு எச்சரிக்கை
சென்னை, ஆக. 28 - சளி, இருமல், சத்து மாத்திரைகள், இதயம், கல்லீரல் நலனுக்கான வைட்ட மின் மருந்துகள், ஒவ்வாமை பாதிப்பு க்கு பயன்படுத்தப்படும் மருந்துகள் என மொத்தம் 156 கூட்டு மருந்துகளால் எதிர் விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறி கடந்த சில நாட்களுக்கு முன்பு, அந்த மருந்துகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது.இதையடுத்து ஒன்றிய அரசு தடை செய்துள்ள மருந்துகளை தமிழகத்தில் எந்த மருந்து கடைகளிலும் விற்பனை செய்யக்கூடாது என்று மாநில மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம் அறிவுறுத்தி யுள்ளது. இதுகுறித்து மாநில மருந்து கட்டுப்பாட்டு இணை இயக்குநர் விடுத் துள்ள அறிக்கையில், “ஒன்றிய அரசு தடை செய்துள்ள 156 மருந்துகளை ஆகஸ்ட் 22-ஆம் தேதி முதல் யாரும் விற்பனை செய்யக்கூடாது. மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.