tamilnadu

‘இஸ்ரேலுக்கு ஆயுதங்களை ஏற்றி அனுப்ப முடியாது

சென்னை, பிப். 18- “பாலஸ்தீன மக்களை இனப்படு கொலை செய்து வரும் இஸ்ரேலுக்கு ஆயுதங்களை ஏற்ற மாட்டோம்” அதற்கு உதவ மாட்டோம் என இந்திய நீர் வழிப்போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனம் அறிவித்துள்ளது. 

“11 முக்கிய இந்தியத் துறைமுகங்களில்  3,500 தொழி லாளர்களைப் பிரதிநிதித்துவப் படுத்தும் இந்திய நீர் வழிப் போக்கு வரத்துத் தொழிலாளர் சம்மேளனம், இஸ்ரேலுக்கு ஆயுதங்களை ஏற்றவோ  அல்லது இறக்கவோ எந்தக் கப்ப லுக்கும் உதவப் போவதில்லை” என சம்மேளனத் தலைவர் சி.டி.நந்தகுமார், பொதுச் செயலாளர் டி.நரேந்திரராவ் ஆகியோர் தெரிவித்துள்ளனர். “இந்த ஆயுதங்களை ஏற்றுவதும் இறக்கு வதும் அப்பாவி மக்களை படுகொலை செய்ய உதவுகிறது” என தங்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளனர். 

மேலும், “துறைமுகத் தொழி லாளர்கள், எப்போதும் போருக்கு எதி ராகவும், பெண்கள் மற்றும் குழந்தை கள் போன்ற அப்பாவி மக்களை படுகொலை செய்வதற்கு எதிராகவும் நிற்பார்கள். காசா  மீதான இஸ்ரேலின்  தாக்குதல் பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீனர்களை பெரும் துன்பத்தி லும் இழப்பிலும் ஆழ்த்தி உள்ளது. பெண்களும் குழந்தைகளும் போரில்  படுகொலை செய்யப்பட்டு வருகின்ற னர். குண்டுவெடிப்புகளில் பலியான தங்கள் குழந்தைகளை பெற்றோரால் அடையாளம் கூட காண முடிய வில்லை.

காசாவில், குறிப்பாக ரஃபாவில்  போரை தீவிரப்படுத்தும் ஆயுதங் களை ஏற்றிச் செல்வதில் கப்பல்  போக்குவரத்துக்கு பங்கு  உள்ளது.  எனவே இதற்கு நாங்கள் துணை போகமாட்டோம்” என்று தெரி வித்துள்ளதோடு உடனடி போர்நிறுத்த த்திற்கும் அழைப்பு விடுத்துள்ளனர்.

பாலஸ்தீனர்களை படுகொலை செய்ய இஸ்ரேல் அதிகமாக பயன் படுத்தி வரும்  ‘ஹெர்மஸ்-900’ என்ற முக்கியமான ஆளில்லா விமானத்தை அதானியின் நிறுவனமே இந்தியாவில் உற்பத்தி செய்கிறது. மேலும் பல்வேறு வகையான தோட்டாக்கள், குண்டுகளையும் உற்பத்தி செய்து வருகிறது. அவற்றை இஸ்ரேலுக்கு கடல் வழியாக கொண்டு செல்கிறது. இந்நிலையில் இந்திய நீர் வழிப்போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனம் இந்த முடிவை எடுத்து பாலஸ்தீன மக்களுடன் தனது ஒருமைப்பாட்டை தெரிவித்துள்ளது. 

மேலும், “உலக அமைதிக்காக பிரச்சாரம் செய்பவர்களுடன் ஒன்றுபடு வோம். சுதந்திர பாலஸ்தீன கோரிக்கைக்கு ஆதரவாக நிற்போம்” என உலகத் தொழிலாளர்களுக்கும் அமைதியை விரும்பும் மக்களுக்கும் அவ்வறிக்கையில் அழைப்பு விடுத்துள்ளனர்.