சென்னை,செப்.18- சென்னையில், 493 இடங்களில் சாலையோர தள்ளுவண்டி கடைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி அறிவித்துள்ளது. இந்த இடங்களில் மாநகராட்சி சார்பில் அறிவிப்பு பலகை அமைக்கும் பணி நடை பெற்று வருகிறது. சென்னையில் நாளுக்கு நாள் மக்கள் தொகை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. பகல் நேரம் போலவே இரவு நேரங்களிலும் அதிக இடங்களில் பணிகள் நடைபெறுவதால் மக்கள் எப்போதும் சாலையில் நடமாடுவதை பார்க்க முடிகிறது. இதேபோல் இரவு முழுவதும் பல உணவகங்கள் திறந்துள்ளதால் உணவ கங்கள் முன்பு நிறுத்தப்படும் வாகனங்க ளால் சில இடங்களில் இரவு நேரங்களில் கூட போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக தி.நகர், பாரிமுனை, புரசை வாக்கம், நுங்கம்பாக்கம், அடையாறு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இரவு நேரங்களிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதையும், சாலையோர கடைகள் முன்பு இருசக்கர வாகனங்களை நிறுத்தி விட்டு பொதுமக்கள் உணவு அருந்தச் செல்வதால் பொதுமக்கள் கடும் அவதிக் குள்ளாவதையும் பார்க்க முடிகிறது. வருங்காலத்தில் இந்த பிரச்சனை இன்னும் அதிகரிக்கும் என்ற காரணத்தினால் சென்னை மாநகராட்சி இதற்கு பல்வேறு வழி களில் தீர்வு கண்டு வருகிறது. அதாவது விற்பனை மண்டலங்கள் மற்றும் விற்பனை செய்யக்கூடாத மண்டலங்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, ஈவெரா பெரியார் சாலை, புதிய ஆவடி சாலை, திருமங்கலம் சாலை, கொளத்தூர் பிரதான சாலை, பிரகாசம் சாலை, மூலச்சத்திரம் பிரதான சாலை, லேபர் காலனி சாலை உள்ளிட்ட இடங்களில் சாலையோரம் வியாபாரம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் சாலைகளில் கடைகள் அமைத்து வியா பாரம் செய்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சென்னை மாந கராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் சுமார் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சாலை யோர வியாபாரிகள் பல்வேறு விதமான வணிகங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களில் 20 ஆயிரத்திற்கும் அதிக மானோர் தள்ளுவண்டிகளில் சாலையோர உணவகங்களை நடத்தி வருகின்றனர். இந்த சாலையோர கடைகளை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைகளில் சென்னை மாநகராட்சி இறங்கியுள்ளது. இதற்காக போக்குவரத்து நெரிசல் இல்லாத பகுதிகளில் சென்னை மாநகராட்சி கடைகளை கட்டி அந்த இடத்தில் வியாபாரிகள் கடைகளை அமைத்துக் கொள்ள நடவடிக்கை எடுத்து வருகிறது.
சாலையோர வியாபாரத்திற்காக முதற்கட்டமாக 4 இடங்களை தேர்வு செய்துள்ளனர். வட சென்னையில் மகாகவி பாரதி நகரில் உள்ள வெஸ்ட் அவென்யூ ரோடு, எழும்பூரில் உள்ள பாந்தியன் லேன், அம்பத்தூரில் உள்ள பார்க் ரோடு, பெசன்ட் நகரில் உள்ள செகன்ட் அவென்யூ ஆகிய இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த தெருக்களில் 150க்கும் மேற்பட்ட கடைகளை கட்டமைக்க உள்ளனர். ஒவ்வொரு கடைக்கும் 5 அடி இடைவெளி இருக்கும். இவற்றுக்கு முறையாக உரிமம் வழங்கப்படும், உணவு பாதுகாப்பு உரிமமும் அளிக்கப்பட உள்ளது. இதில், உணவு கடைகள், ஆபரண கடைகள், சாலையோர சந்தைகள் மற்றும் பழக்கடைகள் ஆகியவை உள்ளன. பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிக்காத விற்பனையாளர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படும். நடைபாதைகளின் ஒரு பக்கம் விற்பனைக்கு அனுமதிக்கப்படும், எதிர்புறம் நடைபயிற்சிக்கு அனுமதிக்கப்படும், என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.