நீட் மறு தேர்வு நடத்த உத்தரவிட முடியாது என உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம், மறு தேர்வு நடத்த உத்தரவிட்டால் 20 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தோ்வு, கடந்த மே 4ஆம் தேதி நடைபெற்றது. அப்போது சென்னையில் பெய்த கனமழை காரணமாக ஆவடியில் ஒதுக்கப்பட்ட தேர்வு மையத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால், மாணவர்கள் முறையாக தோ்வு எழுத முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
இந்த சூழலில், மறுதேர்வு கோரி 16 மாணவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கள் செய்தனர். இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, மனுக்களை தள்ளுபடி செய்தார். இதனை எதிர்த்து 16 மாணவர்களும் 2 நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், நீட் மறு தேர்வு நடத்த உத்தரவிட முடியாது; மறு தேர்வு நடத்த உத்தரவிட்டால் 20 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என தெரிவித்து மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தனர்.