tamilnadu

img

புதிதாக தேர்வு செய்யப்பட்ட 213 சிவில் நீதிபதிகள் பதவியேற்பு

சென்னை, ஜூன் 18- ஊடக விசாரணைகளின் தாக்கத்துக்கு ஆளாகாத வகையில் செயல்பட வேண்டும் என புதிதாக பதவியேற்ற உரிமையியல் (சிவில்) நீதிபதிகளுக்கு உயர்நீதிமன்ற மூத்த  நீதிபதி வினீத் கோத்தாரி அறிவுறுத்தினார். தமிழகம் முழுவதும் புதிதாக தேர்வு செய்யப்பட்ட 213 சிவில் நீதிபதிகளுக்கு சென்னை உயர்நீதிமன்ற மூத்த நீதிபதி வினீத்  கோத்தாரி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அவர்களுக்கான பயிற்சி முகா மையும் துவங்கி வைத்தார். பின்னர் பேசிய நீதிபதி வினீத் கோத்தாரி, வழக்குகளை ஆர்வத்துடன் விசாரித்து, அறிவுப்பூர்வமாக செயல்பட்டு, பாரபட்சமின்றி முடிவெடுக்க வேண்டும் என அறிவுரை வழங்கினார். அதனைத் தொடர்ந்து பேசிய நீதிபதி எஸ். மணிக்குமார், நீதிமன்றம் தவிர்த்து வேறு எங்கும் நீதிபதி என நினைக்காதீர்கள் என்றும்,  நல்ல நீதிபதிகள் என பெயர் வாங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.