tamilnadu

img

ஆன்லைன் விளையாட்டுக்கு புதிய கட்டுப்பாடுகள்!

சென்னை,பிப்09- ஆன்லைன் விளையாட்டுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்து தமிழ்நாடு அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
18 வயதுக்குக் கீழ் உள்ளவர்கள் ஆன்லைன் விளையாட்டில் பணம் வைத்து விளையாடத் தடை விதித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

  • ஆன்லைனில் விளையாடுபவர்கள் யார் என்பது குறித்து நிறுவனங்கள் கண்டிப்பாக கே.ஒய்.சி வாங்க வேண்டும் எனவும் ஆதார் மற்றும் ஓடிபி மூலம் ஆய்வு செய்த பின் தான் விளையாட அனுமதிக்க வேண்டும்.
  • நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணி வரை பணம் வைத்து ஆன்லைன் விளையாட்டு விளையாடத் தடை.
  • ஆன்லைன் விளையாட்டில் தினம்,வாரம், மாதம் எவ்வளவு பணம் செலவாகிறது என்று விளையாடுபவர்களுக்கு ஆன்லைன் நிறுவனம் தகவல் தர வேண்டும்.
  • online gaming is addictive in nature என்பது போன்ற எச்சரிக்கையை ஆன்லைன் விளையாட்டு செயலியில் இடம்பெறச் செய்ய வேண்டும்.  என பல்வேறு கட்டுப்பாடுகளைத் தமிழ்நாடு விளையாட்டு ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில் தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.