தமிழ் வளர்ச்சிக் கழக ஆட்சிக் குழுவுக்கு புதிய நிர்வாகிகள்
சென்னை, நவ. 27 - தமிழ் வளர்ச்சிக் கழக ஆட்சிக்குழுவின் புதிய தலைவராக முன்னாள் துணைவேந்தர் ம. ராஜேந்தி ரன், செயலாளராக சென் னை பல்கலைக்கழக சைவ சித்தாந்தத் துறைத் தலைவர் பேராசிரியர் நல்லூர் சா.சர வணன் உள்ளிட்ட நிர்வாகி கள் தேர்வு செய்யப்பட்டனர்
தமிழ் வளர்ச்சிக் கழக த்தின் ஆட்சிக்குழு மற்றும் பொதுக்குழு ஆகியவற்றின் ஒருங்கிணைந்த கூட்டம் சென்னை பல்கலைக்கழ கத்தில் நடந்தது. தமிழ் வளர்ச்சிக்கழக தலைவர் ம.ராஜேந்திரன் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் புதிய ஆட்சிக்குழு நிர்வாகி கள் தேர்வு நடந்தது. இதில் தலைவராக ம.ராஜேந்திரன், பொருளாளராக வ.ஜெய தேவன், செயலாளர்களாக உலகநாயகி பழனி, பேராசிரி யர் நல்லூர் சா. சரவணன், பதிப்பாசிரியராக பெ. அர்த்த நாரீசுவரன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
மேலும், தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் அறங்காவலர் குழு உறுப்பினர்களாக முன் னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம், ம. ராஜேந்தி ரன், கிருஷ்ண சந்த் சோடியா, பேராசிரியர் வ. ஜெயதேவன், முஸ்தபா, நல்லி குப்புசாமி, எழுத்தா ளர் எஸ். ராமகிருஷ்ணன், பேராசிரியர் சாரதா நம்பி யாரூரன், நாகலட்சுமி குமார சாமி ஆகியோர் நியமிக்கப் பட்டுள்ளனர்.
டிச. 15 அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம்!
சென்னை, நவ. 27 - அதிமுக பொதுச்செய லாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “அதிமுக செயற் குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் டிசம்பர் 15 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு, சென்னை, வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில், கழக அவைத் தலைவர் அ. தமிழ்மகன் உசேன் தலை மையில் நடைபெறஉள்ளது.
கழக செயற்குழு, பொதுக் குழு உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் அனைவருக்கும் தனித் தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படும். உறுப்பினர்கள் ஒவ்வொரு வரும் தங்களுக்கு அனுப்பப் படும் அழைப்பிதழுடன் தவறாமல் வருகை தர வேண்டும்” என்று தெரிவித் துள்ளார்.
3359 சீருடைப் பணியாளர்களுக்குபணி நியமன ஆணைகள் முதலமைச்சர் வழங்கினார்!
சென்னை, நவ. 27 - தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக இரண்டாம் நிலை காவலர்கள், சிறைத்துறை காவலர்கள் மற்றும் தீயணைப்பாளர்கள் ஆகிய பணியிடங்களுக்கு 3,359 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில், இரண்டாம் நிலைக் காவலர் பணியிடத்திற்கு 2599 நபர்கள், (ஆண்கள் 1819 மற்றும் பெண்கள் 780), சிறைத்துறை காவலர் பணியிடத்திற்கு 86 நபர்கள், (ஆண்கள்-83 மற்றும் பெண்கள்-3), தீயணைப்பாளர் பணியிடத்திற்கு 674 நபர்கள் என தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்குவதன் அடையாளமாக, சென்னை, கலைவாணர் அரங்கத்தில் உள்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 1000 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை மு.க. ஸ்டாலின் வழங்கினார். மீதமுள்ள 2359 நபர்கள் அந்தந்த காவல்துறை, தீயணைப்புத்துறை மற்றும் சிறைத்துறை அதிகாரிகள் மூலமாக நேரடியாக பணி நியமன ஆணைகளைப் பெற்றுக்கொண்டனர். இவர்களில் சிறைத்துறை காவலர்களுக்கு 2.12.2024-லிருந்து திருச்சியில் உள்ள மாநில சீர்திருத்த நிர்வாக பயிற்சி நிறுவனத்திலும், இரண்டாம் நிலை காவலர்களுக்கு 4.12.2024 முதல் தமிழ்நாட்டில் உள்ள 8 காவலர் பயிற்சி பள்ளிகளிலும் அடிப்படை பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன.
கொட்டித் தீர்க்கும் கனமழை: கடலூரில் தயார் நிலையில் பேரிடர் மீட்புக்குழு!
சென்னை, நவ. 27 - கடலூரில் பெய்து வரும் கனமழையைத் தொடர்ந்து, அங்கு தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புக்குழுவினர் தயார் நிலையில் நிறுத்தப்பட்டு உள்ளனர். கடலூர் மாவட்டத்தில் கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் ஒரு பேரிடர் மாவட்டம். எந்த ஒரு புயல் மழை என்றாலும் கடலூரைத்தான் முதலில் தாக்கக்கூடும். கடலூர் மாவட்டங்களைச் சுற்றி 49 மீனவக் கிராமங்கள் உள்ளன. இவை அனைத்தும் கடற்கரைப் பகுதிகளை ஒட்டி இருப்பதால் இங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புக்குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
தனுஷ் தொடர்ந்த வழக்கு: நயன்தாரா பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!
சென்னை, நவ. 27 - நடிகர் - தயாரிப்பாளர் தனுஷ் தொடர்ந்த வழக்கில், நடிகை நயன்தாராவும் அவரது கணவர் விக்னேஷ் சிவனும் பதிலளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நயன்தாரா தொடர்பான ஆவணப்படத்தில், ‘நானும் ரவுடிதான்’ படப் பாடல் காட்சிகள் அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டு உள்ளதாகவும், இதற்காக தனக்கு ரூ. 10 கோடி இழப்பீடு தர வேண்டும் என்றும் அந்தப் படத்தின் தயாரிப்பாளரும் நடிகருமான தனுஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் தான், நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஜோடி பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ‘நானும் ரவுடிதான்’ படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட மூன்று விநாடி காட்சியைப் பயன்படுத்திக் கொள்ள தயாரிப்பாளரான நடிகர் தனுஷிடம் தடையின்மை சான்று கோரியதாகவும், ஆனால், அவர் பதில் எதுவும் சொல்லவில்லை. இரண்டு ஆண்டுகளாக பதில் சொல்லாமலும் தடையின்மைச் சான்று தராமலும் பழிவாங்கல் எண்ணத்துடன் நடந்து கொண்டார் என்று தனுஷ் மீது நடிகை நயன்தாரா அண்மையில் பகிரங்க குற்றச்சாட்டை வெளியிட்டிருந்தார்.