tamilnadu

img

முதுநிலைக்கான தேர்வும் ஒத்திவைப்பு

சென்னை, ஜூன் 23 - யுஜிசி-நெட் தேர்வு ரத்தானதைத் தொடர்ந்து, தேசிய தேர்வு வாரியம் (NTA)  நடத்தும் முதுநிலை நீட் தேர்வும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இது நாடு முழுவதும் மருத்துவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

தேர்வைக் கூட நடத்த முடியாத அளவிற்குத் தான் மோடி அரசு உள்ளது என்று அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனங்களைத் தெரிவித்துவருகின்றனர்.

உச்சநீதிமன்றத்திற்கு பயந்து அவசர அவசரமாக, என்டிஏ இயக்குநர் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம், புதிய இயக்குநர் நியமனம், சிபிஐ விசாரணை என பல்வேறு சமாளிப்பு நடவடிக்கைகளில் மோடி அரசு இறங்கியுள்ளது. இதில் நீட் முதுநிலைத் தேர்வையும் ரத்து செய்துள்ளது.

இதற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

“மாணவர்களின் தகுதிக்கான அளவு கோல் எனப் பொய்வேடம் தரித்த நீட் தேர்வு  ஒரு மோசடி என்பதையும், ‘மாணவர் களுக்கு எதிரான - சமூக நீதிக்கு எதிரான, ஏழை களுக்கு எதிரான’ இந்த நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும் தொடர்ந்து வலி யுறுத்தி வருகிறோம். சமீபத்தில் நடைபெற்ற நீட் தேர்வில் ஏற்பட்ட குளறுபடிகள் மற்றும் மோசடிகளைக் கண்டித்ததோடு, நீட் தேர்வு முறையை ஆதரிப்பதை ஒன்றிய அரசு இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினேன். அதனைத் தொடர்ந்து தற்போது தேசிய தேர்வு வாரியம் (NTA) நடத்தும் முதுநிலை நீட் தேர்வும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

யுஜிசி-நெட் தேர்வு ரத்தானதைத் தொடர்ந்து, தேசிய தேர்வு வாரியம் நடத்தும் முதுநிலை நீட் தேர்வும் ஒத்திவைக்கப்பட்டு இருப்பது ஆயிரக்கணக்கான நமது மருத்து வர்களை நம்பிக்கை இழக்கச் செய்துள்ளது. இவை எப்போதோ ஏற்படும் அரிய நேர்வு களாக இல்லாமல், கையாலாகாத, மையப் படுத்தப்பட்ட தேர்வுமுறையின் உடைந்த அமைப்பின் சவப்பெட்டி மீது அறையப் படும் இறுதி ஆணிகளாக அமைந்துள்ளன.

இந்த முறைகேடுகள் வெளிவந்து கொண்டிருக்கும் இவ்வேளையில், தொழில்முறைப் படிப்புகளுக்கான நியாய மான, சமத்துவத்தன்மை கொண்ட தேர்வு முறையை ஏற்படுத்தி, பள்ளிக்கல்வியின் முதன்மையை உறுதிசெய்து, உயர்கல்விக் கான அடிப்படையாக அதனை ஆக்கி, தொழில்முறைப் படிப்புகளுக்கான தேர்வு முறையைத் தீர்மானிப்பதில் மாநிலத்தின் உரிமைகளை மீட்டெடுத்து, அனைத்துக்கும் மேலாக, நமது மாணவர்கள் மற்றும் அவர் களது குடும்பத்தினரிடம் மீண்டும் நம்பிக்கை யை விதைத்து சிறப்பான எதிர் காலத்து  க்குத் திட்டமிடக் கைகள் கோப்போம்!”

இவ்வாறு தனது ‘எக்ஸ்’ பக்கத்தில்  முதல்வர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.