மதுராந்தகம் அருகே சாலை விபத்தில் இருவர் பலி
மதுராந்தகம், ஜூன் 7- செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலில் சாமி தரிசனம் செய்த வளசரவாக்கத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் காரில் சென்னை திரும்பிக் கொண்டிருந்த னர்.
மதுராந்தகம் அடுத்த படாளம் அருகே சென்று கொண்டிருந்தபோது திண்டுக்கல்லில் இருந்து கேரட் ஏற்றி வந்த லாரி பின்புறம் மோதியதில் காரில் பயணம் செய்த ஏழு பேர் சம்பவ இடத்திலே பலியானார்கள். மேலும் காரில் பயணம் செய்த ஐந்து பேர் பலத்த காயங்களுடன் செங்கல் பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து லாரி ஓட்டுநரை கைது செய்த படாளம் போலீசார் விசாரணை மேற்கொண்டத்தில் மழை பெய்து கொண்டு இருந்ததால் லாரி பிரேக் பிடிக்கவில்லை என்று தெரிவிததுள்ளார். சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலை களில் தொடர்ந்து விபத்துக்கள் ஏற்பட்டு வருவதால் சாலை சந்திப்புகளில் பேரிகார்ட் மூலம் வேகத்தடுப்புகளை அமைக்க வேண்டும் என போக்குவரத்து காவல்துறை யினருக்கு பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். தொடர்ந்து விபத்துக்கள் ஏற்படாத வண்ணம் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ரயில்வே, வங்கி பணித் தேர்வுக்கு பயிற்சி
சென்னை, ஜூன் 7- தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் கீழ் இயங்கிவரும் நான் முதல்வன் போட்டித் தேர்வுகள் பிரிவின் மூலம் SSC cum RAILWAYS மற்றும் வங்கிப் பணிகளுக்கான கட்டணமில்லா உறைவிடப் பயிற்சி துவங்கவுள்ளது.
இப்பயிற்சிக்கான 1000 பயனாளர்களை தேர்ந்தெடுப்பதற்காக ஜூலை 14 அன்று இருவேறு நுழைவுத் தேர்வுகள் நடைபெற உள்ளது.
இத்திட்டத்தில் பயன் பெற விரும்பும் மாணவர்கள் வங்கித் தேர்வுக்களுக்கான பயிற்சி அல்லது SSC cum RAILWAYS தேர்வுக்களுக் கான பயிற்சி இவற்றில் ஏதே னும் ஒன்றில் மட்டும் பயிற்சி மேற்கொள்ள முடியும்.
இந்த நுழைவுத் தேர்வு பயிற்சிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மாணவர்கள். https://www.naanmudhalvan.tn.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விரிவான அறிவிக்கையைப் படித்துப் பார்த்து, 8.6.2024 அன்று முதல் விண்ணப்பிக் குமாறு கேட்டுக்கொள்ளப் படு கிறார்கள். விண்ணப் பத்தை சமர்ப்பிப்பதற்கு வரும் 23ஆம் தேதி கடைசி தேதியாகும்.
தனிநபர் விபத்து காப்பீட்டுத் திட்டம்
சென்னை,ஜூன் 7- ரிலையன்ஸ் பொது காப்பீட்டு நிறுவனம், ரிலையன்ஸ் பெர்சனல் ஆக்ஸிடண்ட் 360 ஷீல்ட் என்ற புதிய காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
விபத்தின் விளைவுகளிலிருந்து தனிப்பட்டு நபர்களையும் குடும்ப உறுப்பினர்களையும் இந்த திட்டம் பாதுகாக்கும் என்றும் அந் நிறுவனம் கூறியுள்ளது. விபத்து காரணமான உடல் தகுதி இழப்பு அல்லது மரணத்துக்கு எதிராக, வழக்கமான திட்டங்களில் வழங்கப்படும் காப்பீட்டுப் பலன்களுக்கும் மேலாகச் பின்விளைவுகள் மற்றும் அது தொடர்பான செலவுகளுக்கும் முழுமையான தீர்வை வழங்குவதாகவும் அந்நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி ராகேஷ் ஜெயின், கூறியுள்ளார்.