உதகையில் தேசிய அளவிலான நாய்கள் கண்காட்சி துவக்கம்
உதகை, மே 11- உதகையில் தேசிய அள விலான 136 ஆவது மற்றும் 137 ஆவது நாய்கள் கண் காட்சி சனியன்று துவங்கி யது. இதில், 55 வகைகளில் 450க்கும் மேற்பட்ட நாய்கள் பங்கேற்றன. நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் களைகட்டி யுள்ள நிலையில், நாள்தோ றும் ஆயிரக்கணக்கான சுற்று லாப் பயணிகள் வந்து செல் கின்றனர். அவ்வாறு வரும் சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசிக்கும் வித மாக மாவட்ட நிர்வாகம் சார்பில், பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. தென் னிந்திய கெனல் கிளப் சார்பில் உதகையில் தேசிய அளவிலான நாய் கண்காட்சியும் நடத்தப்பட்டு வரும் நிலையில், இந்த ஆண் டிற்கான 136 ஆவது மற்றும் 137 ஆவது தேசிய அளவிலான நாய்கள் கண்காட்சி உதகை அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் சனியன்று தொடங்கியது. 3 நாட்கள் நடை பெறும் இந்த கண்காட்சியில் சனியன்று நாய் களுக்கான கீழ்படிதல் போட்டியும், ஞாயிறு மற்றும் திங்களன்று (இன்று) அனைத்து வகையான நாய்களுக்கான கண்காட்சி மற் றும் இதர போட்டிகளும் நடைபெறுகிறது. குறிப்பாக, டேஷண்ட், கோல்டன் ரிட்ரீவர், கிரேட் டேன் ஆகிய ரகங்களுக்கான சிறப்பு கண்காட்சிகள் நடத்தப்பட்டது. மேலும், ஜெர் மன் ஷெபர்ட், லேப்ரடார், சைபீரியன் ஹச்கி, பீகில் மற்றும் உள்நாட்டு ரகங்களான ராஜ பாளையம், கன்னி, சிப்பிபாறை உள்ளிட்ட 55 வகைகளில் 450க்கும் மேற்பட்ட நாய்கள் இந்த கண்காட்சியில் கலந்து கொண்டுள் ளன. இந்த போட்டிகளில் தென் ஆப்ரிக்கா, மலேசியா ஆகிய நாடுகளிலிருந்து சிறப்பு நடு வர்கள் கலந்து கொண்டனர். இந்த ஆண்டு முதல் முறையாக தென் னாப்பிரிக்கா நாட்டைச் சார்ந்த ரூடிசியன் ரிச் பேக் இன நாய் போட்டியில் கலந்து கொண் டது. அதேபோல ஜெர்மன் ஷெப்பர்ட் இனத்தை சார்ந்த முழு கருமை நிறத்தில் கொண்டு வரப்பட்ட நாய், பெல்ஜியம் ஷெப்பர்ட இன நாய்கள் பார்வையாளர் களை வெகுவாக கவர்ந்தது. இந்த நாய் கண் காட்சியை ஏராளமான சுற்றுலாப் பயணி கள் கண்டு ரசித்து வருகின்றனர்.