தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) சட்டத் திருத்தத்தை கண்டித்து தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் சனிக்கிழமையன்று (ஆக.3) வள்ளுவர் கோட்டம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பேரா. அருணன் தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், சிபிஎம் மாநிலச் செயற்குழு உறுப்பினர் பெ.சண்முகம், விசிக துணைப்பொதுச் செயலாளர் வன்னி அரசு, மனிதநேய மக்கள் கட்சி பொதுச் செயலாளர் அப்துல் சமது, மதிமுக தீர்மானக்குழு செயலாளர் ஆவடி அந்திரிதாஸ், மூத்த வழக்கறிஞர் என்.ஜி.ஆர்.பிரசாத், சிஎஸ்ஐ முன்னாள் பேராயர் பிஷப் தேவசகாயம், கல்வியாளர் தாவூத் மியாக்கான், கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கத் தலைவர் இனிகோ. இருதயராஜ், ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் எஸ்.என்.சிக்கந்தர், மக்களை மேடை நிர்வாகிகள் க.உதயகுமார், எம்.ராமகிருஷ்ணன், ஜி.செல்வா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.