3 விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருது
சென்னை, ஜன.25- 2023-24 ஆம் ஆண்டிற்கான சிறந்த அங்கக விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட 3 விவசாயிகள் பட்டியலை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
அதன்படி, தஞ்சாவூர் மாவட்டம், மகர்நோன்பு சாவடி யைச் சேர்ந்த கோ.சித்தர் முதல் பரிசாக ரூ. 2.50 லட்சம், சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்படுகிறது.
திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் சேர்ந்த கே.வெ.பழனிச்சாமிக்கு இரண்டாம் பரிசு ரூ.1.50 லட்சம், சான்றி தழ் மற்றும் பதக்கமும், காஞ்சிபுரம் மாவட்டம், அச்சுக்கட்டு கிராமத்தைச் சேர்ந்த கு.எழிலனுக்கு மூன்றாம் பரிசு ரூ.1 லட்சம், சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்படுகிறது.
தமிழக காவலர்களுக்கு குடியரசு தலைவர் விருது அறிவிப்பு
சென்னை,ஜன.25- ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தை முன்னிட்டு காவல் துறையில் சிறப்பாக பணி புரிந்தவர்களுக்கு குடியரசு தலைவர் விருது அறிவிக்கப் படும்.
மூன்று பிரிவுகளில் இந்த விருதுகள் வழங்கப்படுகிறது. அந்த வகையில், தமிழக காவல் துறையில் சிறப்பாக பணியாற்றியவர் களுக்கு பிரிவில் 3 பேருக்கு குடியரசுத் தலைவர் விருது அறிவிக்கப்பட் டுள்ளது.
தமிழ்நாடு ஐ ஜி லலிதா லட்சுமி, கமாண்டண்ட் ராஜலட்சுமி, துணை காவல் ஆய்வாளர் ராயப்பன் ஆகிய 3 பேருக்கு விருது அறிவிக்கப் பட்டுள்ளது. அதேபோல், மெச்சத்தக்க சேவைக் கான குடியரசு தலைவர் விருது 21 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
தொப்பூர் சாலை விபத்து : முதல்வர் நிவாரணம் அறிவிப்பு
சென்னை,ஜன.25- தருமபுரி - சேலம் தேசிய நெடுஞ் சாலையில் தொப்பூர் இரட்டைப் பாலத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாடு அரசு வெளியிட் டுள்ள அறிக்கையில், “தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், பாளையம் உள்வட்டம், தருமபுரி – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தொப்பூர் இரட்டைப் பாலம் அருகில் (ஜன.24) அன்று மாலை 5.15 மணிக்கு 3 லாரிகள் மற்றும் 2 கார்கள் அடுத்தடுத்து மோதிக் கொண்ட சாலை விபத்தில் கோவை டவுன்ஹால், அசோக் நகரைச் சேர்ந்த ஒரே குடும் பத்தைச் சேர்ந்த மஞ்சு (56), விமல் ( 28), அனுஷ்கா (23), ஜெனிபர் ( 29) ஆகிய 4 நபர்கள் உயிரிழந்தனர்.
இவ்விபத்தில் 8 நபர்கள் காய மடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன். இவ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும் பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கி றேன்.
இவ்விபத்தில் உயிரிழந்தவர்க ளுக்கு தலா ரூ. 2 லட்சம் , காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் நபர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
தங்கம் விலை சவரனுக்கு சற்று குறைந்தது
சென்னை,ஜன.25- தங்கத்தின் விலை கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது.
புதன்கிழமை (ஜன.24) சவரனுக்கு ரூ.40 உயர்ந்த நிலையில் வியாழக் கிழமை (ஜன.25) குறைந்துள்ளது.
அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.46,640-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.5,830-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளியின் விலை கிராமுக்கு 70 காசுகள் உயர்ந்து ரூ.77.50-க்கு விற்பனை செய்யப்படு கிறது.