சென்னை,செப்.21- சென்னையில் யமஹா மியூசிக் நிறுவனத்தின் முதல் தொழிற்சாலை திறக்கப்பட்ட பின்னர், தயா ரிக்கப்பட்ட முதல் மேக் இன் இந்தியா கீ போர்டுகளை சென்னையில் இளம் இசை கலைஞர்கள் அறிமுகம் செய்தனர். உலகின் புகழ்பெற்ற இளம் பியானோ கலைஞராக உரு வெடுத்து வரும் லிடியன் நாதஸ்வரம் இந்த சாதனங்க ளில் பல வித இசைத் தொகுப்புகளை வாசித்து காட்டினார். சென்னை பாலா வித்யா பவனின் மாணவர்கள் மெய்சிலிர்க்கும் வகையில் பிஎஸ்எஸ் தொடர் கீ போர்டு களை இசைத்து காண்பித்த னர். குழந்தைகள், இந்த நாட்களில் ஸ்மார்ட் போன்க ளில் அதிக நேரம் செல வழிக்கிறார்கள். விர்ச்சுவல் எனப்படும் மெய்நிகர் விளை யாட்டுகளுக்கு அடிமையாகி வருகிறார்கள். இதனால் அவர்கள் இளம் வயதி லேயே கண்பாதிப்பு, தூக்க மின்மை, மெதுவான மூளை வளர்ச்சி மற்றும் மோசமான மன ஆரோக்கியம் போன்ற பல்வேறு உபாதைகளை சந்திக்கவேண்டியுள்ளது. இசைக்கருவிகளை வாசிக்கும் இளம் குழந்தை கள் விரைவான மூளை வளர்ச்சியை எட்டுவதாக மருத்துவ ஆய்வுகள் தெரி விப்பதாக யமஹா மியூசிக் இந்தியா மேலாண் இயக்கு நர் தகாஷி ஹாகா கூறினார். இளம்தலைமுறையினரை ஆரோக்கியமான பாதை யில் அழைத்துச் செல்ல வேண் டிய பொறுப்பும் கடமையும் பெற்றோருக்கு உண்டு என்றும் அவர் கூறினார்.