இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனியின் மகள் மீரா(16) தற்கொலை செய்து கொண்டார்.
விஜய் ஆண்டனி, குடும்பத்துடன் சென்னை ஆழ்வார்பேட்டை டிடிகே சாலையில் வசித்து வருகிறார். அவரது மகள் மீரா தனியார் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்த நிலையில், தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவர் மன அழுத்தத்தில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
மீராவின் இழப்பினால், விஜய் ஆண்டனியின் குடும்பத்தினர் சொல்லொணாத் துயரத்துக்கு ஆளாகியிருக்கிறார்கள். விஜய் ஆண்டனிக்கு பாத்திமா என்ற மனைவியும், மீரா, லாரா என இரு மகள்கள் இருந்த நிலையில், மீரா இன்று தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மகளை இழந்து வாடும் விஜய் ஆண்டனிக்கு திரையுலகப் பிரபலங்களும், ரசிகர்களும் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகிறார்கள்.