tamilnadu

img

குவைத் தீ விபத்தில் இறந்தவர்களின் உடல்கள் கொச்சி வந்தடைந்தன!

குவைத் தீ விபத்தில் உயிரிழந்த இந்தியர்கள் 45 பேரின் உடல்கள் இந்திய விமானப்படை விமானம் மூலம் கொச்சி விமான நிலையம் வந்தடைந்தன.
குவைத் நாட்டின் தெற்கு அகமதி மாகாணம், மங்காப் நகரத்தில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில் புதன்கிழமை (ஜூன் 12) அதிகாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இவர்களில் 45 இந்தியர்கள் என்பதை குவைத் அரசாங்கம் உறுதிப் படுத்தியுள்ள நிலையில், 24 பேர் மலை யாளிகள் என்று கேரள அரசும், 7 பேர் தமிழர்கள் என்று தமிழக அரசும் உறுதி செய்துள்ளன. இந்த நிலையில், இந்தியர்கள் 45 பேரின் உடல்கள் இந்திய விமானப்படை விமானம் மூலம் கொச்சி விமான நிலையம் வந்தடைந்தன.
தமிழ்நாட்டைச் சேர்ந்த 7 பேரின் உடல்களையும் பெற்று, ஆம்புலன்ஸ் மூலம் அவரவர்களின் சொந்த ஊர்களுக்குக் கொண்டு செல்ல தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்துள்ளது.