நாகப்பட்டினம்/திருவாரூர், ஜன.28- திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்ட த்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி வருகை யை எதிர்த்து கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற் கொண்டார். பல்வேறு இடங்களுக்குச் சென்ற அவருக்கு வழிநெடுகிலும் மக்கள் கருப்புக் கொடி காட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆளுநர் வேலையை செய்யாமல், 2024 நாடாளு மன்ற தேர்தலை முன்வைத்து பாஜக- வின் வேலைகளை செய்து கொண்டி ருக்கிறார். வீரவெண்மணியில் முழக்கம் உழைக்கும் மக்களின் தியாகத்தால் உருவான வெண்மணி வீர தியாகி களின் மண்ணிற்கு ஆளுநர் வரு வதை எதிர்த்து, சிபிஎம் நாகை மாவட்டச் செயலாளர் வி.மாரிமுத்து தலைமை யில் கீழவெண்மணி நுழைவாயிலில் கருப்புக் கொடி ஏந்தி “ஆளுநரே திரும்பி போ” என்ற முழக்கத்துடன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விவசாயிகள் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் வி.சுப்ரமணியன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்.எம்.அபுபக்கர், கட்சியின் மாவட்டத் தலைவர் ஆர்.என்.அமிர்தராஜா, விடு தலை சிறுத்தைகள் மாவட்டச் செய லாளர் நாக.அருள்செல்வன் உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர். வெண்மணி நினைவகத்தை யொட்டி காவல்துறை வாகனங் களும், நூற்றுக்கணக்கான காவல் துறையினரும் குவிக்கப்பட்டிருந்தனர்.
இதனிடையே வெண்மணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர் பழனிவேல் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தும் கூட, அவரது இல்லத் திற்கு ஆளுநர் வருகை தந்தார். பெருங்கடம்பனூர் வேளாங்கண்ணி, நம்பியா நகரை அடுத்த நாகை ஒன்றியம் பெருங்கடம் பனூரில் காத்தவராயன் கோயிலில் சாமி தரிசனமும், நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்கும் ஆளுநர் ரவி சென்றார். அங்கு சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் டி.லதா, எம்.முருகையன், ஏ.வேணு, மாவட்டக் குழு உறுப்பினர் எஸ்.பாண்டியன் தலைமையில் நூற்றுக்கணக்கானோர் திரண்டு கருப்புக் கொடி காட்டினர். காவல்துறையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்.
பொரவச்சேரியில் தள்ளுமுள்ளு நாகை ஒன்றியம் பொரவச்சேரி தனியார் கல்லூரி மைதானத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டம் நடைபெறும் நுழைவாயி லில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ப.சுபாஷ் சந்திரபோஸ்,
மனித நேய மக்கள் கட்சி மாவட்டத் தலைவர் ஒ.எஸ்.இப்ராகிம், திராவிடர் கழகத்தைச் சேர்ந்த வி.எஸ்.டி.ஏ.நெப்போலியன் உள்ளிட்டோர் தலைமையில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
முன்னதாக கருப்புக் கொடியுடன் சிறிது தூரம் பேரணியாக வந்து முழக்கமிட்ட நிலை யில், காவல்துறையினருக்கும் ஆர்ப்பாட்டக் காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
மாவட்டம் முழுவதிலும், காங்கிரஸ் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனித நேய மக்கள் கட்சி, திராவிடர் கழகம் உள்ளிட்ட இந்தியா கூட்டணிக் கட்சிகள் இந்த ஆர்ப்பாட்டத் தில் கலந்து கொண்டனர்.
திருவாரூர்
பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக திருவாரூர் மாவட்டத்திற்கு வருகை தந்த தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் கருப்புக் கொடி காட்ட முயன்றனர். அப்போது காவல்துறை அனுமதிக்காததால் புதிய ரயில் நிலையம், நாகை சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மறியலில், சிபிஐ நாகை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.செல்வராஜ், சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன், மாவட்டச் செய லாளர் ஜி.சுந்தரமூர்த்தி, சிபிஐ மாநில நிர்வாக குழு உறுப்பினர் பி.எஸ்.மாசிலாமணி, மாவட்டச் செயலாளர் வை.செல்வராஜ், திரா விடர் கழகத்தின் மாவட்டத் தலைவர் மோகன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருவாரூர் மைய மாவட்டச் செயலாளர் தங்க.தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் கருப்பு கொடி மறியலில் ஈடுபட்டனர்.
இந்த கருப்புக் கொடி போராட்டத்தில் காவல்துறைக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் சிபிஐ மாவட்டச் செயலாளர் வை.செல்வராஜ் மயங்கி விழுந்தார். மயக்கமடைந்த அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி, மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன் மற்றும் தலைவர்கள் மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்தனர்.