சென்னை, மார்ச் 19- தமிழ்நாட்டில் பிரச்சாரப் பொதுக் கூட்டங்களில் பங்கேற்று வரும் பிரதமர் நரேந்திர மோடி, தேர்தல் விதிகள் அனைத்தையும் அப்பட்டமாக மீறி வருகிறார் என்று இரா.முத்தரசன் குற்றம் சாட்டினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தர சன், தமது கட்சியின் வேட்பாளர் களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தேர்தலில் என் னென்ன நடைமுறைகளை பின் பற்ற வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.
இது ஆளும்கட்சி, எதிர்க்கட்சி என இல்லாமல் அனைத்து கட்சியின ருக்கும் பொதுவானது. இவற்றை யாரும் மீறக் கூடாது; அனைவரும் பின்பற்றி நடக்க வேண்டும். ஆனால் நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி, இந்த தேர்தல் விதிகள் அனைத்தையும் அப்பட்டமாக மீறு கின்ற வகையில், தனது பிரச்சா ரத்தை மேற்கொண்டு வருகிறார்” என்றார். மேலும் அவர் கூறுகையில், “கோவையில் ரோடு ஷோ என்ற பெயரால் பெரிய ஒரு ஆர்ப்பாட்டத் தோடு ஏற்பாடு செய்யப்பட்டிருந் தது.
பாஜக மற்றும் மோடி எதிர் பார்த்தபடி பொதுமக்கள் யாரும் அங்கு வரவில்லை. அதற்கு மாறாக பள்ளிக் குழந்தைகளை கொண்டு வந்து தெருவில் நிறுத்தி, அவர்கள் வரவேற்பு கொடுப்பதை போல செய்து இருக்கிறார்கள். இது அப் பட்டமான விதிமீறல் ஆகும். இது குறித்து நாங்கள் தேர்தல் ஆணை யத்திடம் தெரிவிப்போம். மோடி மீதும், பாஜக மீதும் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று எங்கள் கட்சியின் சார்பில் வற் புறுத்தி கேட்டுக்கொள்கிறோம்.
இந்தத் தேர்தலை ஜனநாயக ரீதியில் எதிர்கொள்ள முடியுமா, என்ற அச்சம் எழுகிறது. ஒன்றியத் தில் இருக்கக்கூடிய ஆட்சி என்பது ஜனநாயகத்திற்கு புறம்பாக சர்வா திகாரமாக பாசிச தன்மையோடு செயல்படுகிற காரணத்தினால் தேர் தல் ஆணையமும் மற்றவர்களும் அவர்களுக்கு அடிபணிந்து விடு வார்களோ என்ற அச்சம் நிலவு கிறது. அவற்றை எல்லாம் எதிர் கொண்டு நாங்கள் தேர்தலை சந் திப்போம். தமிழகம் மற்றும் புதுச் சேரி உள்ளிட்ட 40 இடங்களிலும் திமுக தலைமையிலான எங்களு டைய கூட்டணி மகத்தான வெற்றி பெறும்” என்று தெரிவித்தார்.