tamilnadu

சிஏஜி அறிக்கைகள் 2010-2023 ஒரு பார்வை

தலைமை தணிக்கை கணக்கு அதிகாரி சிஏஜி அளிக்கும் தணிக்கை அறிக்கைகளை நாடாளு மன்றத்தில் தாக்கல் செய்வது பிரதமர் மோடி ஆட்சியில் வெகுவாகக் குறைந்துவிட்டது.

சராசரியாக, 2014-2018-ம் ஆண்டு காலகட்டத்தில் கிட்டத்தட்ட 40 அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 2015-ஆம் ஆண்டு மட்டுமே 53 அறிக்கைகள் தாக்க லாகியுள்ளது. 2019-2023-ஆம் ஆண்டு களில் ஒவ்வொரு ஆண்டும் 22 அறிக்கை கள் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

2023- ஆம் ஆண்டில் இதுவரை ஒன்றிய அரசின் கணக்குகள் குறித்த 18  தணிக்கை அறிக்கைகள் மட்டுமே நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. நாடாளு மன்றத்தில் தாக்கல் செய்யப்படும் ஒன்றிய  அரசு மீதான தணிக்கை அறிக்கைகள் சில ஆண்டுகளாக குறைந்து வருகின்றன.

ஆனால் கடந்த ஆறு ஆண்டுகளில் இருபது அல்லது அதற்கும் குறை வான அறிக்கைகளே தாக்கல் செய்யப் பட்டுள்ளன.

2010- 2023-ஆண்டுக்கு இடையில் தணிக்கைக்குழுவின் இணையதளத்தில் வெளியிடப்பட்ட ஒன்றிய அரசின் 400-க்கும் மேற்பட்ட தணிக்கை அறிக்கை களை பகுப்பாய்வு செய்ததன் மூலம் இந்த  புள்ளிவிவரங்கள் வந்துள்ளன.   2023 ஏப்ரல், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்பட்ட மூன்று அறிக்கைகள் இன்னும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை.

உதாரணத்திற்கு, ரயில்வே துறை தொடர்பான 14 தணிக்கை அறிக்கைகள் கடந்த ஐந்தாண்டுகளில் தாக்கல் செய்யப் பட்டுள்ளன.  சிவில் துறைகளைப் பொறுத்த வரை கடந்த ஐந்து ஆண்டுகளில் 34  தணிக்கை அறிக்கைகள் வெளியிடப் பட்டன. இதற்கு முந்தைய ஐந்தாண்டு கால த்தில் 42 அறிக்கைகள் வெளியிடப் பட்டுள்ளன. 

பாதுகாப்புத்துறை தொடர்பான அறிக்கை 2017-ஆம் ஆண்டு முந்தையது. தி இந்தியன் எக்ஸ்பிரஸில் 2020-ஆம்  ஆண்டு அறிக்கையின்படி, முன்னாள் தணிக்கை அதிகாரி ராஜீவ் மெஹ்ரிஷி கூறி யுள்ளார். (பாதுகாப்பு அறிக்கைகளை) யாரும் எளிதில் அணுகக் கூடாது என்பதற் காக செய்யப்பட்ட முடிவாகக் கூட இருக்கலாம். 

சிஏஜி என்பது இந்திய தணிக்கை மற்றும் கணக்கு துறைக்கு தலைமை வகிக்கும் ஒரு அரசியலமைப்பின் அதிகாரம் பெற்ற அமைப்பாகும். இந்த இரண்டு துறைகளும் இந்தியாவின் உச்ச தணிக்கை நிறுவனம்  என அழைக்கப்படுகின்றன.

2021-22-ஆம் ஆண்டு நிலவரப்படி, தணிக்கை மற்றும் கணக்கியல் துறையில் 41,675 பணியாளர்கள் பணியில் இருந்தனர். 2013-14-ஆம் ஆண்டு 48,253 பேர் பணியில் இருந்துள்ளனர்.

2014-15-ஆம் ஆண்டு 789 ஆக இருந்த  ஐஏ மற்றும் ஏஎஸ் (IA&AS) அதிகாரிகளின் எண்ணிக்கை 2021-22-ஆம் ஆண்டு 553 ஆகக் குறைந்துள்ளது. தணிக்கை மற்றும் கணக்குத்துறை ஊழியர்களின் எண்ணிக்கை 2013-14 ஆம் ஆண்டு 26,000 க்கும் அதிகமாக இருந்து 2021-22 ஆம் ஆண்டு அது 20,320 ஆக குறைந்தது. 

தொடர் முயற்சிகள் காரணமாக, காலி யிடப் பணியிடங்கள் ஓரளவு குறைந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆட்சேர்ப்பு  காரணமாக, காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறையும் என்று  எதிர்பார்ப்பதாக சிஏஜி அதிகாரி ஒருவர் கூறினார்.

ஒன்றிய அரசின் பட்ஜெட்டின் மொத்த செலவில் ஒரு பங்காகக் கருதப்படும் இந்திய தணிக்கை கணக்குத்துறைக்கு (IA&AD) ஒதுக்கப்பட்ட நிதியும் குறைக்கப்பட்டுள்ளது. 2024-ஆம் ஆண்டு கணக்குத்துறைக்கான தணிக்கை மற்றும் கணக்கியல் துறைக்கான ஒதுக்கீடு 0.13 சதவீதம் மட்டுமே. ஆனால், 2017-ஆம் ஆண்டு  0.19 சதவீதம் ஒதுக்கப்பட்டிருந்தது. 

ஒட்டுமொத்தத்தில் இந்தத் துறைக்கு 2017-ஆம் ஆண்டு ஒதுக்கப்பட்ட நிதி ரூ.3,780 கோடி. 2023-24-ஆம் நிதியாண்டில் ரூ.5,806 கோடியாக அதிகரித்துள்ளது. ஆனால், ஒன்றிய அரசின் மொத்த பட்ஜெட் செலவில் இது குறைவு.

இந்த தணிக்கை அறிக்கைகளுக்குப் பிறகு, புதுதில்லியில் உள்ள கணக்கியல் தணிக்கைத்துறை அலுவலகத்தால் “அனைத்துக் களப்பணிகளையும் நிறுத்த” “வாய்மொழி உத்தரவு” பிறப்பிக்கப்பட்ட தாக ‘தி வயர்’ செய்தி வெளியிட்டுள்ளது.

ஆனால், இதுபோன்ற வாய்மொழி உத்தரவுகள் பிறப்பிக்கப்படவில்லை என்று சிஏஜி அலுவலகம் மறுத்துள்ளது. நாடு  முழுவதும் களத் தணிக்கைக் குழுக்கள்  வழக்கம் போல் பணியாற்றி வருகின்றன எனத் தெரிவித்துள்ளது. என்று அது கூறியது.

நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்பட்ட சிஏஜியின் 12 அறிக்கைகள், ஒன்றிய அர சின் அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் நிதி மற்றும் பிற முறைகேடுகள் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்விகளால் துளைத்தெடுத்தன. இதில் பாஜக வசமாக சிக்கிக்கொண்டது குறிப்பிடத்தக்கது.