tamilnadu

img

ரயில்வே ஊழியர்களின் அவசரகால சிகிச்சைக்கும் மோடி அரசு வேட்டு!

சென்னை, டிச.10- ரயில்வே பணியா ளர்கள் - பணி ஓய்வு  பெற்ற பல்லாயிரக்க ணக்கான தொழிலா ளர்கள் அங்கீரிக்கப் பட்ட தனியார் மருத்து வமனைகளில அவசர காலங்களில் சிகிச்சை பெறும் திட்டம் உள்ளது. அதற்கான கட்டணத்தை ரயில்வே  துறையே செலுத்திவிடும். 

இந்தத் திட்டம் 2016-ஆம் ஆண்டு  மெட்ரோ நகரங்களில் தொடங்கப்பட்டு, பின்னர் நாடு முழுவதும் விரிவுபடுத்தப் பட்டது. குறிப்பாக, ஓய்வுபெற்ற ரயில்வே  ஊழியர்கள் கிராமப்புறங்களில் பெருமளவு வசிக்கின்றனர். அவர்களில் உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள், அவசர சிகிச்சை  தேவைப்படுவோர் எளிதில் ரயில்வே மருத்  துவமனைகளுக்கு வர இயலாது. எனவே, எளிதில் அவர்கள் மருத்துவ வசதியை பெறு வதற்காக உருவாக்கப்பட்டதுதான் அவ சரகால பணமில்லா சிகிச்சை திட்டம். 

இந்தத் திட்டத்தின் கீழ் பலன்பெறும் ரயில்வே ஊழியர்கள் உள்ளூர் ரயில்வே மருத்துவ அதிகாரிகளின் பரிந்துரையின்றி, எந்த ஒரு நகரத்திலும் அல்லது ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் சென்று தனியார் மருத்துவமனைகளிலும்  அவசர சிகிச்சை பெறுவதற்கு வசதி செய்து  கொடுக்கப்பட்டுள்ளது.

ஆனால், தற்போது “ஒரு நோயாளியை தனியார் மருத்துவமனைக்கு அனுப்ப லாமா வேண்டாமா என்பதை ரயில்வே  மருத்துவர்கள் மட்டுமே முடிவு செய்வார்  கள். அதன்பிறகே தனியார் மருத்துவமனை களில் சேர முடியும். மாறாக, ரயில்வே மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் எடுக்கப்படும் சிகிச்சைக்கு பணம் கிடைக் காது” என்று கூறப்பட்டுள்ளது. இது ஊழி யர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி யுள்ளது.

டிஆர்இயு கண்டனம்
அவசரகால பணமில்லா சிகிச்சை திட் டத்தை திரும்பப் பெறும் ரயில்வேயின் முடிவை தட்சிண ரயில்வே ஊழியர் சங்கம்  (டிஆர்இயு) கண்டித்துள்ளது. இதுகுறித்து நமது செய்தியாளரிடம் பேசிய டிஆர்இயு  மதுரை கோட்டச் செயலாளர் சங்கரநாரா யணன், “ இதய வலி, மாரடைப்பு, விபத்து  உள்ளிட்ட நோய்கள் சொல்லிக்கொண்டு வருபவை அல்ல. இதுபோன்ற உயிர்காக்  கும் மருத்து சிகிச்சை பெறுவதற்கு அரு கிலுள்ள தனியார் மருத்துவமனைகளை நாட வேண்டிய அவசியம் உள்ளது. அப்போதுதான் தொழிலாளி, தொழிலாளி குடும்பத்தினரின் உயிர்களைப் பாதுகாக்க முடியும். இப்போது ரயில்வே மருத்துவர் சான்றளித்தால் மட்டுமே தனியார் மருத்து வமனைகளுக்கு செல்ல முடியும் எனக்  கூறுவதை ஏற்க முடியாது. அவசர சிகிச்சை  பெறுவதற்கு தனியார் மருத்துவமனை களுக்கு செல்வதை தடை செய்யக்கூடாது. இல்லையெனில், எந்த நோக்கத்திற்காக இந்த திட்டம் கொண்டுவரப்பட்டதோ, அது அடிபட்டு விடும்” என்று குறிப்பிட்டுள்ளார்.