திருச்சிராப்பள்ளி, மே 11- “பிரதமர் மோடியின் தேர் தல் பிரச்சாரமே இந்தியா கூட் டணி தான் வெற்றி பெறும் என் பதை உறுதி செய்துள்ளது” என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநில செயலாளர் இரா. முத்தரசன் தெரிவித்துள்ளார்.
“மக்களவைத் தேர்தலில் எந்த பிரதமரும் மோடி போல் தரம் தாழ்ந்த முறையில் பிரச் சாரம் செய்ததில்லை. மோடி யின் பரப்புரை இந்தியா கூட் டணி தான் வெற்றி பெறும் என் பதை உறுதி செய்துள்ளது.
அவரது பேச்சு குறித்து அர சியல் கட்சிகள் மட்டுமல்லாது பல்வேறு தரப்பினர் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித் தாலும் ஆணையம் மோடிக்கு நோட்டீஸ் அனுப்பாமல் பாஜக வுக்கு நோட்டீஸ் அனுப்பி உள் ளது. இதற்கு முன்பு தேர்தல் ஆணையம் இதுபோல் நடந் தது கிடையாது.
வாக்குப் பதிவு விவரங்கள் வெளியிடுவதில் தொடர்ந்து குளறுபடி இருந்து வருகிறது. இதனால் தேர்தல் ஆணை யத்தின் மீது மக்களின் நம்பகத் தன்மை கேள்விக் குறியாகி உள் ளது. இது கவலைக்குரிய விஷ யம். தேர்தல் ஆணையத்தின் மீது மக்களிடம் உள்ள நம்ப கத்தன்மை காப்பாற்றப்பட வேண்டும்.
சவுக்கு சங்கர் போன்ற வர்கள் பெண்களை இழிவுப் படுத்தி பேசுவதை வன்மையாக கண்டிக்கிறோம். அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நடைபெறும் தேர்தல் சர்வா திகாரத்திற்கு எதிரான, பாசி சத்திற்கு எதிரான தேர்தல். அத னால் தான் கெஜ்ரிவால் போன் றோர் சிறையில் அடைக்கப்பட் டார்கள். அதற்கு பதிலடி கொடுத்துத்தான் தற்போது நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது” என்றும் முத்தரசன் பேட்டியில் கூறியுள்ளார்.