சென்னை, டிச. 17- சென்னை மாவட்ட சாலையோர சிறுகடை விற்பனையாளர்கள் சங்கத்தின் மாதவரம் பகுதி முதல் பேரவைக் கூட்டம் கே.சி.ஏ.கருத்திருமன் தலைமையில் மாதவரத்தில் நடைபெற்றது.
எம்.பாலாஜி அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். சங்கத்தின் மாவட்டச் செயலாளர். டி.வெங்கட் பேரவையை துவக்கி வைத்து பேசினார். வியாபாரிகள் சங்கத் தலைவர் வி.கமலநாதன், வீ.ஆனந்தன் (வழக்கறிஞர்கள் சங்கம்), டி.சாரதி (சிபிஎம்) ஆகியோர் வாழ்த்திப் பேசினர். சென்னை மாநகராட்சி விற்பனைக் குழு உறுப்பினர் ஜி.மோனிஷா பேரவையை நிறைவு செய்து பேசினார். முன்னதாக வசந்தா வரவேற்றார். லட்சுமணன் நன்றி கூறினார்
. தீர்மானங்கள் எம்.எம்.சி. சாலையோரம் வியாபாரம் செய்யும் சிறுகடை விற்பனையாளர்களுக்கு அதே இடத்தை மாநகராட்சி அதிகாரிகள் முறைப்படுத்தி வழங்க வேண்டும், அடையாள அட்டை வழங்காதவர்களுக்கு உடனே வழங்க வேண்டும், மாநகராட்சி யால் வழங்கப்படும் தள்ளு வண்டிகள் அனைத்து வியாபாரிகளுக்கும் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பேரவையில் தலைவராக. கே.சி.ஏ. கருத்திருமன், செயலாளராக என்.பாலன், பொருளாளராக. கே.லட்சுமணன் உள்ளிட்ட 10 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.