tamilnadu

img

எம்எல்ஏ அலுவலகங்களை திறக்க அனுமதிக்க வேண்டும்! தலைமை தேர்தல் அதிகாரிக்கு மனு

சென்னை, ஏப்.26- தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்ற உறுப்பி னர்கள் அலுவலகங் களும், தேர்தல் அறிவிப்பு  வெளியான மார்ச் 16 அன்று  அந்த அந்தந்த மாவட்ட ஆட்சியர்களின் உத்தர வின்படி மூடி முத்திரை யிடப்பட்டது.  

தற்போது, தேர்தல் முடிவடைந்து விட்ட நிலை யில், தமிழ்நாட்டில் பறக்கும் படையினரின் கண்கா ணிப்பு மாநிலத்தின் எல்லைப் பகுதிகளை தவிர உட்புறங்களில் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் தங்கள் அலு வலகங்களுக்கு சென்று பணியாற்றவும் தேர்தல் ஆணையம் அனுமதித்துள்ளது.

 ஆனால், பூட்டப்பட்ட எம்எல்ஏக்களின் அலு வலகங்கள் இன்னும் திறக்கப்படாமல் உள்ளன. நகராட்சித் தலைவர் அலுவலகம் உட்பட உள் ளாட்சி பிரதிநிதிகளுக்கு ஒதுக்கப்பட்ட தனி அலு வலகங்களும் பூட்டியே கிடக்கின்றன.

இதையடுத்து, மக்கள் பணியாற்றுவதற்காக எம்.எல்.ஏ. அலுவலகங்களைத் திறந்து விட வேண்  டும் என்று 234 தொகுதியிலும் உள்ள எம்.எல்.ஏ.க்கள் தேர்தல் ஆணையத்துக்கு கோரிக்கை  மனு அனுப்பி உள்ளனர். தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரிக்கும் இ-மெயில் மூலம் இந்த கோரிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.