tamilnadu

தீக்கதிர் முக்கிய செய்திகள்

பேருந்துகளை பரிசோதித்து இயக்க அமைச்சர் உத்தரவு
சென்னை,பிப்.7- சென்னையில் ஓடும் பேருந்தின் இருக்கைக்கு கீழே இருந்த பலகை உடைந்து கீழே விழுந்த பெண் பயணி படுகாயங்களுடன் உயிர் தப்பி னார். இந்த சம்பவத்தை அடுத்து போக்கு வரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப் பதாவது:-

அனைத்து மாநகர பேருந்துகளை யும் முழுமையாக பரிசோதித்த பின் இயக்க வேண்டும். சென்னையில் இயக்கப்படும் 3000-க்கும் மேற்பட்ட பேருந்துகள் மேற்கூரை, பாகங்கள் சரி யாக பரிசோதித்து இயக்க அதிகாரி களுக்கு அவர் அறிவுறுத்தி உள்ளார்.

மிக மோசமான நிலையில் உள்ள அரசு பேருந்துகளை முழுமையாக நிறுத்த முடிவு செய்துள்ளதாக தகவல்  வெளியாகியுள்ளது.

பாஜகவை தோற்கடிப்போம்: மமக
சென்னை,பிப்.7- வரும் மக்களவைத் தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க ஜனநாயக சக்திகள் அனைத்தும் ஓரணியில் திரள வேண்டும். திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி போட்டியிட வேண்டும். மாநில அரசை முடக்கும் வேலையை மட்டும் செய்யும் ஆளுநர் பதவியை ஒழிக்க வேண்டும் என்று கட்சியின் மாநில தலைவர் ஜவாஹிருல்லா, பொதுச் செயலாளர் அப்துல் சமது ஆகியோர் பங்கேற்ற மாநில பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சிஏஏ சட்டத்தை தமிழ்நாட்டில் அமல்படுத்த மாட்டோம் என்று அறிவித்தது, நீண்ட காலமாக சிறையில் உள்ள இஸ்லாமிய சிறைவாசி களை விடுவித்தது உள்ளிட்ட நடவடிக் கைகளுக்காக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

என்ஐஏ அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் ஆஜர்
சென்னை,பிப்.7- தடை செய்யப்பட்ட அமைப்பிட மிருந்து பணம் பெற்றதாக கிடைத்த  தகவலின் பேரில், நாம் தமிழர் கட்சி யின் நிர்வாகிகள் வீடு மற்றும் அவர்க ளுக்கு தொடர்புடைய இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் கடந்த 2 ஆம்  தேதி சோதனை நடத்தினர்.

6 இடங்களில்  நடைபெற்ற இந்த சோதனையில் சிக்கி யது என்ன? என்பது பற்றி என்ஐஏ  அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான விசார ணைக்கு ஆஜராகுமாறு சாட்டை துரைமுருகன், பாலாஜி, ரஞ்சித்குமார், முருகன், மதிவாணன், இடும்பாவனம் கார்த்திக் உள்ளிட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளுக்கு என்.ஐ.ஏ. தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டது.

என்.ஐ.ஏ. சம்மனை அடுத்து, சென்னை புரசைவாக்கத்தில் உள்ள  தேசிய புலனாய்வு முகமை அலுவல கத்தில் சாட்டை துரைமுருகன் உட்பட 3 பேர் விசாரணைக்காக ஆஜராகினர்.

தங்கம் விலை ரூ.160 உயர்வு

சென்னை,பிப்.7- தங்கத்தின் விலை கடந்த சில  வாரங்களாக உயர்ந்து வந்த நிலையில்,  செவ்வாயன்று சவரனுக்கு 160 ரூபாய்  குறைந்து 46 ஆயிரத்து 640க்கு  விற்பனை  செய்யப்பட்டது. இந்நிலையில் புதன்கிழமை (பிப்.7) சென்னையில் 22  கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 160 ரூபாய் உயர்ந்து 46 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. தங்கம் விலை கிராமுக்கு 20 ரூபாய் உயர்ந்து 5 ஆயிரத்து 850 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி விலை 76 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.