tamilnadu

img

அமைச்சர் ஜெயக்குமாருடன் இன்சூரன்ஸ் ஊழியர் சங்க தலைவர்கள் சந்திப்பு

ஆயுள் இன்சூரன்ஸ் பிரிமியம் மீதான ஜிஎஸ்டியை நீக்க வேண்டும் என்று ஜிஎஸ்டி கவுன்சிலில் இடம்பெற்றுள்ள தமிழக அரசின் உறுப்பினரான அமைச்சர் டி.ஜெயக்குமார், கடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் கோரிக்கை எழுப்பினார். முன்னதாக இக்கோரிக்கையை எழுப்புமாறு வேண்டுகோள் விடுத்து அமைச்சர் டி.ஜெயக்குமாருக்கு, பல்வேறு கோட்ட காப்பீட்டு ஊழியர் சங்கங்களின் முயற்சியில் தமிழகம் முழுவதும் இருந்து 25ஆயிரத்திற்கும் மேற்பட்ட முக்கிய பிரமுகர்கள், அமைப்புகள் சார்பில் கடிதங்கள் அனுப்பப்பட்டிருந்தன. இதையொட்டி அவர் அக்கோரிக்கையை எழுப்பினார். அவருக்கு நன்றி தெரிவித்தும் தமிழக அரசின் இந்த முயற்சி தொடர வேண்டும் என்றும் வலியுறுத்தியும், தென்மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் தலைவர்கள் டி.செந்தில்குமார், க.சுவாமிநாதன். ஆர்.கே.கோபிநாத், எஸ்.ரமேஷ்குமார், எஸ்.சிவசுப்பிரமணியன், வி.ஜானகிராமன் மற்றும்  ஜெயராமன், தனசெல்வம், மனோகரன் ஆகியோர் நேரில் சந்தித்து பேசினர். அமைச்சரும் உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்தார்.

;