tamilnadu

img

கூட்டுறவு வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் ஒத்திவைப்பு

சென்னை, ஜன. 23 - கூட்டுறவு வங்கி ஊழியர் சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகளை நிறை வேற்ற, துறை பதிவாளருக்கு அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் அறிவுறுத்தினார். இதனையடுத்து வேலை நிறுத்தத்தை ஒத்தி வைப் பதாக கூட்டுறவு வங்கி ஊழியர் சம்மேளனம் அறிவித்துள்ளது.

20 விழுக்காடு ஊதிய உயர்வு வழங்க வேண்டும், ‘தமிழ்நாடு வங்கி’யை உருவாக்க வேண்டும். நகர கூட்டுறவு வங்கிகளின் மாவட்ட  அளவில் இணைத்து பலப்படுத்த வேண்டும். கூட்டுறவு ஊழியர்க ளுக்கு வழங்கப்படாமல் உள்ள 10 விழுக்காடு போனஸ் நிலுவை வழங்க வேண்டும். ஊழியர் கடன்க ளுக்கான வட்டி விகிதம் 0.5 விழுக் காடு உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டுறவு வங்கி ஊழியர் சம்மேள னம் சார்பில் செவ்வாயன்று (ஜன.23)  வேலை நிறுத்தப் போராட்டம்  தொடங்கியது.

இதனையொட்டி மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடை பெற்றன. சென்னை மாவட்ட மத்திய  கூட்டுறவு வங்கி முன்பு நடைபெற்ற  ஆர்ப்பாட்டத்தில் சம்மேளன தலை வர் தி.தமிழரசு, பொதுச் செயலாளர் இ.சர்வேசன், சங்கத்தின் தலைவர் எம்.ராஜகேசி, பொதுச் செயலாளர் கே.கோவிந்தராஜூ உள்ளிட்டோர் பேசினர். பேச்சுவார்த்தை இதனைத் தொடர்ந்து கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பனை சிஐடியு மாநில தலைவரும், சம்மேளனத்தின் கவுரவ தலைவருமான அ.சவுந்தர ராசன் தலைமையில் சம்மேள நிர்வாகிகள் சந்தித்து பேசினர்.

இது தொடர்பாக பேசிய தி.தமிழ ரசு, “கூட்டுறவு சங்கங்களின் பதிவா ளரை தொடர்பு கொண்டு பேசிய அமைச்சர் கோரிக்கைகள் ஒவ்வொன்றாக கூறி நிறைவேற்ற அறிவுறுத்தினர். குறிப்பாக, ஊழியர்  கடன் வட்டி உயர்வை ரத்து செய் வது, நிலுவை தொகை வழங்குவது, ஊதிய உயர்வு விழுக்காட்டின் அளவை உயர்த்துவது உள்ளிட்ட அம்சங்கள் புதனன்று (ஜன.24) தொழிற்சங்கத்துடன் பேசி நிறை வேற்ற வேண்டும் என அறிவுறுத்தி னார். கோரிக்கைகள் அனைத்தும் பேச்சுவார்த்தையில் நிறைவேற் றப்படும் என்று அமைச்சர் உறுதி கூறினார். அதனையேற்று புதனன்று (ஜன.24) நடைபெற இருந்த வேலை நிறுத்தத்தை ஒத்தி வைக்கிறோம்” என்றார்.