சென்னை, மார்ச் 12- “ஒரு கோடியே 16 லட்சம் பெண்கள் குஷ்பு விற்கு பதிலளிப்பார்கள்” என அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.
சென்னை செங்குன்றத்தில் செய்தியாளர் களைச் சந்தித்த குஷ்பு, “தாய்மார்களுக்கு ரூ.1000 பிச்சைப் போட்டால் அவர்கள் திமுக- வுக்கு வாக்களிப்பார்களா? என கேள்வி எழுப்பியிருந்தார்.
தமிழ்நாடு அரசு பெண்களுக்கு வழங்கும் கலைஞர் மகளிர் உதவித் தொகைத் திட்டத் தைத் தாய்மார்களுக்குப் போடும் பிச்சை எனக் குறிப்பிட்டு பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. பல்வேறு தரப்பினரும் குஷ்புவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் குஷ்புவின் இந்த கருத் துக்கு ஒரு கோடியே 16 லட்சம் மக்கள் பதில ளிப்பார்கள் என சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தெரி வித்துள்ளார்.ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை என்பது பெண்களுக்கு பொருளா தார சுதந்திரத்தை கொடுத்துள்ளது என்றும் அவர் தெரிவித்தள்ளார்.