மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்
சென்னை, மே 19- சென்னையில் உள்ள புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் செல்ல கூடுதல் ரயில்களை இயக்க வேண்டும் என்று தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக கட்சியின் வட சென்னை மாவட்டச் செயலாளர் எல்.சுந்தரராஜன் முதலமைச்சருக்கு அனுப்பியுள்ள கடிதத்தின் சுருக்கம் வருமாறு: தமிழகத்தில் சுமார் 10 லட்சம் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் உள்ள னர். புலம் பெயரும் தொழிலாளர் சட்டத்தை தமிழகத்தில் அமல்ப டுத்தாததால், அத்தகைய தொழி லாளர்களின் பட்டியல் அரசிடம் இல்லை. எனவேதான், எவ்வளவு தொழிலாளர்கள் எங்கெங்கு இருக்கி றார்கள் என்பதை அறிந்து கொள்ள முடியாமல், அரசு தோல்வியைச் சந்தித்துள்ளது. தொழிலாளர்கள் வேலை செய்த இடத்திலிருந்து வெளியேற்றப்பட்டும், வாடகை கொடுக்க முடியாமலும் வீட்டை காலி செய்துவிட்டு, உணவு, தங்க இட மின்றி சாலைகளில் குடும்பங்களோடு பரிதவிக்கின்றனர்.
சென்னையில் உள்ள புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊருக்குச் செல்ல மத்திய அரசு ரயில்களை இயக்கினாலும், உணவுக்கான ஏற்பாடுகளை மாநில அரசுகள் மேற்கொள்ளும் என்றும் அறிவித்துள்ளது. இந்த ஏற்பாடுகள் போதுமானதாக இல்லை. சென்னை மாநகராட்சி நிர்வாகம் ஒரு நாளைக்கு 2 அல்லது 3 ரயில்களில் மட்டுமே தொழிலாளர்களை அனுப்பி வைக்கிறது. இதன்படி நாளொன்றுக்கு 3 ஆயிரம் பேர் மட்டுமே செல்கின்றனர். லட்சக்க ணக்கான தொழிலாளர்கள் உள்ள நிலையில் குறைந்த எண்ணிக்கை யில் ரயில்கள் இயக்குவது போது மானதல்ல.
மேலும் இணைய தளத்தில் பதிவு செய்தால் மட்டுமே ரயிலில் இடம் கிடைக்கும் என்ற நிலை உள்ளது. படிப்பறிவில்லாத தொழி லாளர்களுக்கு இணையதள வசதி யைப் பயன்படுத்த முடியவில்லை. சொந்த ஊருக்குப் செல்ல தனியார் போக்குவரத்து நிறுவனங்களை அணுகினால் பெருந்தொகையை கட்டணமாக கேட்பதால் தொழிலா ளர் தவித்து வருகின்றனர். எனவே, தமிழக அரசு கூடுத லான ரயில் இயக்குவதற்கு மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். மாநில அரசும் பேருந்து வசதிகளை செய்து கொடுத்து தொழிலாளர்களை உரிய காலத்தில் அனுப்பி வைக்க வேண்டும். அதுவரையில், தொழி லாளர்களுக்கு தங்குமிடத்தையும், உணவுயும் அரசு வழங்க வேண்டும். உணவின்றி உள்ள புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு தேவையான உணவுப் பொருட்கள் வழங்க வேண்டுமென்று ஏப். 22 அன்று முதலமைச்சருக்கு கடி தத்தில் கோரியிருந்ததோம். ஆனால், இன்று வரை தொழிலா ளர்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கவில்லை. மாநகராட்சி அதி காரிகள் அதுபோன்று எந்த உத்தர வும் வரவில்லை என்கிறார்கள். ஆகவே, புலம் பெயர்ந்த தொழிலா ளர்களுக்கு போதிய உணவு மற்றும் தங்கும் வசதியை செய்து கொடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.